பெங்களுரூ,செப்.3- நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறக் கப்பட்ட சந்திரயான்- 3 விண் கலத்தின் அனைத்து கருவி களும் செயல்பட தொடங்கி யுள்ளதால் இஸ்ரோ விஞ்ஞா னிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். இந்நிலையில் ரோவர் தனக்கு இட்ட பணிகளை முடித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ)தெரி வித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ரோவர் தனக்கிட்ட பணிகளை முடித்துள்ளது. தற்போது பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு ஓய்வு நிலைக்கு மாற்றப் பட்டுள்ளது. APXS- LIBS கருவிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. ரோவ ரில் உள்ள கருவிகள் அனுப் பிய தகவல்கள் லேண்டர் வழியாக பூமிக்கு வந்தடை ந்தது. தற்போது ரோவரின் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. ரோவரில் உள்ள சோலர் பேனல் அடுத்ததாக நிலவில் சூரிய உதயம் வரும் 22 ஆம் தேதி சூரிய ஒளியை பெறும் வகையில் வழிவகை செய் யப்பட்டுள்ளது. மேலும் தக வல்களை பெறும் ரிசீவர் ஆன் செய்தே வைக்கப் பட்டுள்ளது. அடுத்த கட்ட பணிகளுக்காக ரோவர் செயல்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.