states

img

ஒன்றிய பட்ஜெட்டிற்காக மாநில பட்ஜெட்டை தள்ளிவைத்த ஆந்திர அரசு

அமராவதி கடந்த வாரம் தெலுங்கு தேச  தலைவரும், ஆந்திர முதல்வ ருமான சந்திரபாபு நாயுடு பிரத மர் மோடி உள்ளிட்ட 5 ஒன்றிய அமைச்  சர்களை சந்தித்து, புதிய தலைநகர் அமராவதி வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.15  ஆயிரம் கோடி உள்பட, ஆந்திரா மாநி லத்திற்கு ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி  வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  இந்த கோரிக்கையால் பிரதமரும், ஒன்  றிய அமைச்சர்களும் அதிர்ச்சிய டைந்ததாக தகவல் வெளியாகிய நிலையில், சந்திரபாபு கோரிக்கை குறித்து இதுவரை மோடி அரசு சாதா ரண அறிவிப்பை கூட வெளியிட வில்லை.  இந்நிலையில், தனது கட்சியின் ஆதரவால் தான் மோடி அரசு ஆட்சி யில் இருக்கிறது என்பதால், ஒன்றிய பட்ஜெட்டில் கண்டிப்பாக ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு நிதி தொடர் பான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் ஆந்திர மாநில பட்ஜெட்டை தள்ளிவைப்பதாக சந்திர பாபு நாயுடு புதனன்று அறிவித்துள் ளார். அதாவது 2024-2025 ஆண்டிற் கான ஆந்திராவின் முழு பட்ஜெட் ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட  இருந்த நிலையில், அதனை செப்டம் பர் மாதம் வரை ஒத்திவைக்க சந்திர பாபு முடிவு செய்துள்ளார். 18ஆவது நாடாளுமன்ற மக்கள வையின் முதல் பட்ஜெட் ஜூலை 23  அன்று அறிவிக்கப்பட உள்ளது. இதற்  கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவ தாக ஒன்றிய அரசு சமீபத்தில் தக வல் தெரிவித்த நிலையில், ஒன்றிய  பட்ஜெட்டிற்காக மாநில பட்ஜெட்டை  ஒத்திவைப்பதாக சந்திரபாபு அறிவித் துள்ளது மோடி அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் சிறப்பு நிதி கோரி க்கை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் இம்முறை நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டாக இருக்குமா அல்லது சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரின் பட்ஜெட்டாக இருக்குமா என்ற கேள்வி  எழுந்துள்ளது.