states

img

ஜனநாயகத்தை மீட்டெடுக்க முன்வரும் மாணவர்கள் : அசோகன் சருவில்

பதற்றத்தை ஏற்படுத்தும் வேந்தர்: ஆர்.பிந்து

பல்கலைக்கழகத்தில் வேந்தர் தங்கியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்துவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்தார். கொல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவர் போராட்டங்களில்  வேந்தர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். மாணவர்களுடனான மோதலை முடித்துவிட்டு வளாகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். வேந்தர் பொறுப்பு ஆளுநரிடம் கேரள சட்டப்பேரவையால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் நடத்தை தரக்குறைவாக உள்ளது. ஒரு வேந்தராக, இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்றார் அமைச்சர்.

திருச்சூர், டிச.18- ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் இந்திய மக்களின் மாபெரும் போராட்ட த்தில் முற்போக்கு மாணவர் இயக்கம் களமிறங்குகிறது என்பதற்கு கேர ளத்தில் உள்ள கோழிக்கோடு பல் கலைக்கழக தலைமையகத்தில் இருந்து வெளியாகும் காட்சிகள் அடை யாளம் என முற்போக்கு கலை சங்க த்தின் பொதுச்செயலாளர் அசோகன் சருவில் கூறினார். இதுகுறித்து அவர்  மேலும் கூறியதாவது: சுதந்திரம் மற்றும் ஜனநாய கத்திற்கான இயக்கங்களுக்கு மாண வர்கள் தலைமை தாங்குவது அசாதா ரணமானது அல்ல. உலகின் பல பகு திகளிலும் நடந்த விடுதலை இயக்கங் களில் அவர்கள் பெரும் பங்கு வகித்த னர். அதை இந்திய தேசிய இயக்கத்தி லும் பார்க்கலாம். இந்தியாவிலேயே பீகாரை மையமாக வைத்து ஜெயப்பிர காஷ் நாராயணன் தலைமையில் நடந்த “முழுப் புரட்சி” இயக்கத்தில் மாணவர்கள் பெரும் பங்காற்றினர். அவசர நிலைக்கு எதிரான போராட்ட த்தில் அவர்களின் பங்கும் அதிகம். இளைய தலைமுறையினரால் பெரியவர்களைப் போல எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நாளைய உலகம் அவர்களுக்கே சொந்தம். அவர்கள் அதை சுதந்திரமாகவும் ஜன நாயகமாகவும் மாற்ற முயற்சிப் பார்கள். குறுகிய அரசியல் பகைமை களை ஒதுக்கிவைத்து சங்பரிவார் அரசு பாசிசத்திற்கு எதிராக முன்னே றும் மாணவர்களுடன் இணைந்து நிற்பது கேரளாவில் உள்ள மதச்சார் பற்ற ஜனநாயகவாதிகளின் கடமை என்று அசோகன் சருவில் கூறினார்.