சமூக மேம்பாட்டு ஆய்வு மையம் (சி எஸ் டி எஸ்), லோக் நிதி என்ற அமைப்புகள் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தி உள்ளன. கடந்த சில தினங்களாக ஆங்கில இந்து நாளிதழ் இந்த கருத்துக்கணிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 100 நாடாளு மன்ற தொகுதிகளுக்கு உட் பட்ட பகுதிகளில் சுமார் 10,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சமூக அடிப்படையில் பல்வேறு பிரிவினரை யும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வகையில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கருத்துக் கணிப்பின் முடிவுகளை வெளியிட்டு ள்ளனர். இதில் மீண்டும் மோடி பிரத மராக வரவேண்டும் என்றும், பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தி ருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேசம யம் கடும் போட்டியை சந்திக்கும் நிலை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்
முழுமையைப் பிரதிபலிக்கவில்லை
இந்த கருத்துக்கணிப்பு நடத்திய விதத்தையும், இதில் கேள்விகள் முன்வைக்கப்பட்ட தன்மையையும் பார்த்தால், முழுமையான துல்லிய மான அறிவியல் அடிப்படையிலான ஆய்வு என்று சொல்வதற்கு இல்லை. எனினும் சிஎஸ்டிஎஸ், லோக் நிதி நடத்திய கடந்த கால கருத்துக்கணிப்பு கள் தேர்தல் தீர்ப்புகளுக்கு மிகவும் நெருக்கமாக வந்துள்ளன என்ற உண்மையை மறுப்பதற்கு இல்லை. மாதிரி கருத்துக் கணிப்பு என்பது குறைந்தபட்சம் ஐந்து சதவீதம் பேரை தொடர்பு கொண்டு கருத்து கேட்ப தாக இருந்தால் அது நம்பத்தக்க தாக இருக்கும் என்று புள்ளியியல் ஆய்வுத்துறையினர் தெரிவிக்கின்ற னர். அந்தக் கணக்கின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு முழுமையை பிரதிபலிப்பதாக இல்லை. ஆனாலும் கூட இந்த கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தி இருக்கக்கூடிய விபரங்களை நுணுகி ஆராய்ந்தால், மோடி அரசு தோற்கும், கரை சேராது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
பட்டியலிடப்பட்டுள்ள புள்ளி விவ ரங்களை தனித்தனியாக ஒவ்வொன் றாக விளக்கிக் கூறி, மோடி வெற்றி பெற மாட்டார் என்ற முடிவுக்கு வர முடியும். எனினும் சுருக்கமாக சில விஷயங்களை மட்டும் பார்க்கலாம். 2004 - கருத்துக்கணிப்புக்கு மாறாக வாஜ்பாய் அரசு தோல்வி கடந்த 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய ஐந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், ஏற்கனவே இருக்கும் ஆட்சி தொடர வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்பட்டுள் ளது. அதில் 2004 ஆம் ஆண்டு தேர்த லில், முந்தைய ஆட்சி தொடர வேண்டும் என்று 48 சதவீதம் பேரும், தொடரக்கூடாது என்று 30 சதவிகிதம் பெறும் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது 2004 ஆம் ஆண்டுக்கு முன்பாக வாஜ்பாய் பிரதமராக இருந் தார் என்பதை கவனத்தில் கொண் டால், அப்போதைய கருத்துக்கணிப் பில் மீண்டும் தொடர வேண்டும் என்று சொன்னவர்கள் 48 சதவீதம் பேர். தொடரக் கூடாது என்று சொன்னவர் கள் 30 சதவிகிதம் பேர் மட்டுமே. இதை அடிப்படையாகக் கொண்டால் வாஜ் பாய் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்று சொன்னவர்கள் பெரும் பான்மையாக இருந்தனர். அப்போது கருத்து தெரிவிக்காதவர்கள் 22 சத விகிதம் பேர். இந்தக் கருத்துக் கணிப்புக்கு பிறகு தேர்தல் முடிவை பார்த்தால் வாஜ்பாய் ஆட்சி தோற்றுப் போனது. பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்ததற்கு மாறாக தேர்தல் முடிவு அமைந்தது. அதற்குப் பிந்தைய 2014 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பின் அப்போ தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர வேண்டும் என்று சொன்னவர்கள் 23 சதவிகிதம் பேர் மட்டுமே, தொடரக்கூடாது என்று தெரி வித்தவர்கள் 54 சதவீதம் பேர். அதன் படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பாஜக ஆட்சியில் எதிர்க் கருத்து தெரிவிக்க அஞ்சும் மக்கள்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜன நாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது “இந்தியா ஒளிர்கிறது” என்று மிகப்பெரிய விளம்பரத்தை கட்ட விழ்த்துவிட்டனர். அத்துடன் பாஜக ஆட்சியில் இருக்கும் பொழுதெல்லாம் எதிர்க் கருத்து தெரிவிப்பவருக்கு அச்சு றுத்தல் தொடர்ந்து வந்தது. எனவே கருத்துக் கணிப்பில் வெளிப்படையாக உண்மையைச் சொல்லாமல் தேர்த லில் தங்கள் முடிவின் அடிப்படையில் வாஜ்பாய் அரசை தோற்கடித்தனர். அதேசமயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2014இல் தோற்ற பொழுது, கருத்துக் கணிப்பின் முடிவு ஒத்திசைவாக இருந்தது. ஏனென்றால் கருத்து தெரிவித்தவர்கள் அச்சமில்லா மல் கருத்து தெரிவித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு கட்டமைத்த பிம்பத்தை விட, தற்போதைய மோடி அரசு கட்டமைத் திருக்கும் பொய் பிம்பம் மிகப் பிர மாண்டமானதாகவும், கருத்து சுதந்திரம் நசுக்கப்படும் நிலையும் உள்ளது. இருந்தாலும் கூட தற்போது மோடி ஆட்சி தொடர வேண்டும் என்று சொன்னவர்கள் 44 சதவீதம் பேர், தொடரக்கூடாது என்று சொன்ன வர்கள் 39 சதவீதம் பேர். கருத்துத் தெரி விக்காதவர்கள் 17 சதவிகிதம் பேர்! ஆட்சி தொடரக்கூடாது என்ற எண்ணிக்கையையும் கருத்து தெரி விக்காதவர்கள் எண்ணிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் 56 சதவிகிதம் பேர் வருகிறது! நிகரமாக மோடி ஆட்சி வேண்டும் என்பவர்கள் 44 சதவிகிதம் பேர் என்றால் அதைவிட 12 சதவிகிதம் பேர் வேண்டாம் என்று சொல்வதாக அர்த்தம்.
70 சதவீதம் பேர் எதிர்க்கருத்து நிலை
அத்துடன் இந்த கருத்துக்கணிப் பில் மோடி அரசின் பிரச்சனைகளாக விலைவாசி உயர்வு, வேலையின்மை, வருமானம் வீழ்ச்சி, ஊழல், கார்ப்ப ரேட் ஆதரவு ஆகியவற்றை சொல்லி இருப்பவர்கள் 75 சதவீதம் பேர் உள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கட்டியது மோடியின் குறிப்பிடத்தக்க சாதனை என்று சொல்லக்கூடியவர்கள் மோடி யை மறுபடி விரும்பக் கூடியவர்கள் 30 சதவிகிதம் பேர். கேள்வித்தாளின் பல்வேறு தரவுகளையும் ஒப்பிட்டு தொகுத்து ஆய்வு செய்து பார்த்தால், மொத்தத்தில் 30 சதவிகிதம் பேர் மட்டுமே உறுதியாக பாஜக ஆதரவு கொண்டவர்களாக இருக்கின்றனர். மற்ற 70 சதவீதம் பேர் அதற்கு எதிரான கருத்து நிலையை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகுதான், காங்கிரஸ் உள்ளிட்ட இந்த அணியில் உள்ள கட்சி களின் தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தெளிவான தொகுதி பங்கீடு என்பது முடிந்து பிரச்சாரம் தொடங்கப்பட்டது. எனவே இந்த அம்சங்கள் வாக்காளர்கள் நம்பிக்கையை பெறும் என்பது நிச்சயம்.
தோல்வியை நோக்கிச்சென்று கொண்டிருக்கும் மோடி அரசு
இந்தக் கருத்துக் கணிப்பின் நிறை வாக மோடி அரசு மீண்டும்வர வேண்டும் என்று கணிசமானவர்கள் கருத்து தெரிவித்திருந்த போதும், மோடி அரசு தொடரக்கூடாது என்பவர்கள் சற்று குறைவாக இருந்த போதும், எந்தக் கருத்தும் சொல்லாதவர்கள் ஏறக்குறைய 15 முதல் 20 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் எப்படி முடிவு செய்வார்கள் என்பதை பொறுத்து இந்த கணிப்புகள் மாறக்கூடும் என்றும் முன்னெச்சரிக்கையாக தெரி வித்துள்ளனர். அதாவது கருத்து தெரிவிக்காத வர்கள், இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படையாக கருத்துச் சொல்வதற்கு தயங்கி, தேர்தலில் தெளிவாக பாஜக அரசுக்கு எதிராக வாக்களிக்கக் கூடியவர்களாக இருக்கலாம். எனில் மோடி அரசின் தோல்வி தவிர்க்க முடியாதது! ஆக சிஎஸ்டிஎஸ் - லோக் நிதி கருத்துக்கணிப்பு மேலோட்டமாக பார்க்கும் பொழுது மோடி ஆட்சி மீண்டும் வரும் என்று சொல்வதாக இருந்தாலும், மோடி அரசு கடுமை யான எதிர்ப்பை சந்தித்து தோல்வியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை உள்ளர்த்தமாக வெளிப் படுத்தி உள்ளது.
- வே.தூயவன்