states

மணிப்பூர் நிலவரத்தை ஆராய ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் குழு

அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்து உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுதில்லி, ஆக. 7 - மணிப்பூரில் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, உச்ச நீதிமன்றம் அதிரடியான பல உத்தரவு களைப் பிறப்பித்துள்ளது. மணிப்பூர் வன்முறைகள் குறித்து,  கள ஆய்வு மேற்கொள்ள, 3 பேர்  கொண்ட ஓய்வுபெற்ற பெண் நீதிபதி கள் குழுவை அமைத்துள்ள உச்ச நீதி மன்றம், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆஷா மேனன், ஷாலினி பி ஜோஷி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறி வித்துள்ளது.  ஓய்வுபெற்ற நீதிபதிகளின் இந்தக் குழுவானது, மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணை, நிவாரணம், நிவாரண நடவடிக்கைகள், இழப்பீடு மற்றும் மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் போன்ற மனிதாபிமான உதவிகள் செய்யப்படுவதை கண்காணிக்கும். மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, ஒன்றிய அரசு ஏற்கெனவே 11 வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் நிலையில், இதில், பாலியல் வழக்கு களை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த  அதிகாரிகள் இடம்பெற வேண்டும். சட்டத்தின் மீது  நம்பிக்கையை உறுதிப்படுத்த, குறைந்தபட்சம் டிஎஸ்பி பதவியில் உள்ள 5 அதிகாரிகள் விசாரணை நடத்த  வேண்டும். மேலும், சிபிஐ விசாரிக்கும் வழக்குகளை தேசிய பாதுகாப்பு முன்னாள் துணை ஆலோசகரும் மகா ராஷ்டிரா முன்னாள் டிஜிபி-யுமான  தத்தாத்ரே பட்சல்கிகர் கண்காணிப் பார். அதேபோல, சிபிஐ விசாரணை அல்லாமல், சிறப்பு புலனாய்வு விசார ணைக்கு (SIT) உத்தரவிடப்பட்டு உள்ள 42 வழக்குகளை மணிப்பூ ருக்கு வெளியே உள்ள டிஐஜி அந்தஸ்திலான அதிகாரிகள் கண் காணிப்பார்கள். ஒவ்வொரு அதிகாரி யும் 6 சிறப்பு புலனாய்வு விசாரணை களை கண்காணிப்பார்கள் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை

மணிப்பூரில் கடந்த மே 4 அன்று,  மெய்டெய் பிரிவைச் சேர்ந்த ஆயி ரக்கணக்கானோர், குக்கி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்கள் இரு வரை, நிர்வாணமாக இழுத்துச் சென்று  பாலியல் அத்துமீறல் கொடுமை, சித்ர வதைகளை அரங்கேற்றியதுடன், கும்பல் வல்லுறவுக்கும் உள்ளாக்கினர்.  இதுதொடர்பான வீடியோ ஆதாரம் 2 மாதம் கழித்து, கடந்த ஜூலை 19 அன்று வெளியான பின்னணியில், நாடே  பெரும் அதிர்ச்சியில் உறைந்தது.  சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்  கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இந்த விவ காரத்தை ஜூலை 20 அன்று தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது, “மணிப்பூர் விவகாரத்தால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். அரசு செயல்படவில்லை என்றால், நாங்கள்  நடவடிக்கை எடுப்போம்” என அதி ரடியாக கூறினார். குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய - மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டார்.

ஒன்றிய - மாநில பாஜக அரசுகளுக்கு கண்டனம்

இந்த வழக்கு ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் மீண்டும் விசார ணைக்கு வந்தபோதும், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் அணுகுமுறையை கடுமையாக சாடியது. மேலும் மணிப்பூர் மாநில டிஜிபி ராஜீவ் சிங் ஆகஸ்ட் 7-ஆம் தேதி  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கவனத்திற்கு வந்த பிரச்சனைகள்

அதன்படி திங்களன்று (ஆகஸ்ட் 7) இந்த வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி ராஜீவ் சிங் நேரில் ஆஜரானார். ஒன்றிய  - மாநில பாஜக அரசுகளின் தரப்பில்  அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்  மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், இந்திரா ஜெய்சிங், கொலின் கோன்சால்வ்ஸ், விருந்தா குரோவர், நிஜாம் பாஷா உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர். அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, வாதிடுகையில், மணிப்பூரில் உள்ள சூழ்நிலையை அரசு மிகவும் முதிர்ச்சி யுடன் கையாண்டு வருவதாக தெரி வித்தார். 

“சிபிஐ எத்தனை வழக்குகளை விசாரிக்கிறது; முன்பு கூறிய 11 என்ற  எண்ணிக்கைதானா?” என்று தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாங்கள் கண்டறிந்தது 11 மட்டுமே” என்றார். “அப்போது, புதுப்பிக்கப்பட்ட பட்டிய லில் 16 வழக்குகள் உள்ளன என்று வழக் கறிஞர் நிஜாம் பாஷா தெரிவித்தார்.  “இங்கு குற்றச்சாட்டுக்கள் மாநில  காவல்துறைக்கு எதிரானது. ஆனால்,  அதனை மாநில அரசு அமைக்கும் சிறப்பு விசாரணைக்குழு நியாயமாக விசாரிக்கும் என்று எப்படி கூறமுடி யும். நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் துறைகளில் முதன்மையானதாக காவல் துறை உள்ளது. எனவே, சிறப்பு விசாரணைக்குழு நீதிமன்றத்தால் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்றும் பாஷா வலியுறுத்தினார்.  “இறந்த உடல்களைப் பெறு வதற்காக உறவினர்கள் இம்பாலுக்குச் செல்ல வேண்டும். ஆனால், சட்டம் - ஒழுங்கு நிலை காரணமாக இம்பா லுக்குச் செல்ல யாருக்கும் தைரியம் இல்லை. எனவே, பிணவறைகளை அடையாளம் காணும் ஆன்லைன் வசதி உருவாக்கப்பட்டால் நல்லது” என்றும் பாஷா கூறினார். 

“நிர்பயா சம்பவத்தின் போது, போலீ சார் தங்கள் கடமையை செய்யவில்லை என்பது தெரியவந்தது. எனவே 2012 திருத்தத்தின் மூலம், ஐபிசி-யில் 166ஹ  அறிமுகப்படுத்தப்பட்டது. 166ஹ, தங்கள் கடமைகளைச் செய்யாத காவல் துறை அதிகாரிகள் தண்டிக்கப்படு வார்கள் என்று கூறுகிறது. இந்த பிரிவை மணிப்பூரில் செயல்படுத்த வேண்டும்” என்று வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறினார். “ஒரு கலவரம் நடக்கும் போது, நாம் ஆட்டுவிக்கும் ‘ரிங்’ தலைவர்களை நாம் அடையாளம் காண வேண்டும். அவர்கள் 10 முதல் 20 பேர் வரை தான் இருப்பார்கள். ஆனால் நன்றாக  இணைக்கப்பட்டவர்களாக இருப் பார்கள். சதியை உருவாக்கி செயல் படுத்தும் இவர்ககள் போன்ற முக்கிய நபர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த முக்கியமான 10 முதல் 20 பேர் தண்டிக்கப்பட்டால் தாக்குதல்கள் நிறுத்தப்படும். ஆனால், அவர்களைத் தொட முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் வெறுப்புப் பேச்சுகள் போன்றவற்றைச் செய்கிறார்கள்” என்று வழக்கறிஞர் கோன்சால்வ்ஸ் சுட்டிக்காட்டினார். அரசு நிர்வாகத்திடம் இருந்து  வெடிமருந்துகள் கொள்ளை யடிக்கப்பட்டு உள்ளது. கொள்ளை யடிக்க அனுமதிக்கப்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது  மிகவும் தீவிரமான குற்றச்சாட்டாகும், ஏனென்றால் எளிதாக கிடைத்த ஆயு தங்கள் இந்த வன்முறையில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில், அரசாங்கத்திற்கு பங்கிருக்கிறதா? என்பதை ஆய்வுசெய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் புஷண் வலியுறுத்தினார். இந்த வாதங்களின் முடிவிலேயே, உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் குழுவை அமைத்ததுடன், சிபிஐ, எஸ்ஐடி விசாரணைகள் தொடர்பாகவும் பல்வேறு வழிகாட்டு தல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது.