புதுதில்லி, அக்.13- தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலா ண்மை ஆணையம் கூட்டம் ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிரதிநிதி கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை அடிப்படையில் அக்டோபர் 16 முதல் 15 நாட் களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் உத்தரவுபிறப்பித்தார். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளியன்று மாலை 36.89 அடியாக உயர்ந்துள்ளது. எனினும், வியாழனன்று விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி அளவிற்கு இருந்த நீர்வரத்து வெள்ளியன்று மாலை 15 ஆயிரத்து 547 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 10.54 டிஎம்சியாக உள்ளது.