states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

பறிமுதல் செய்யுங்கள்!

இந்திய பொதுத்துறை வங்கிகளில் நான்காவது பெரிய வங்கியான கனரா வங்கி ரூ.100 கோடி யும், அதற்கு மேலும் கடன் வாங்கி திருப்பி தராத  மிகப் பெரிய ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு தொடர்ந்து  அந்த கடன்களை வராக் கடன் என்ற பெயரில் தள்ளு படி செய்து வருகிறது. இப்படி கடந்த 11 ஆண்டு களில் இந்த வங்கி, ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 88 கோடி அளவிற்கு கடன்களை தள்ளுபடி செய்து  பெரும் கார்ப்பரேட்டுகள், முதலாளிகளாக உள்ள  மோசடி பேர்வழிகளுக்கு தாராளம் காட்டியிருக்கி றது. இதுதொடர்பான முழு விபரம், புனே நகரைச் சேர்ந்த தகவல் உரிமை செயற்பாட்டாளரான விவேக் வேளாங்கர் எழுப்பிய கேள்வியின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் யார் யாருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை அளிக்க கனரா வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதன்மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளும் மீறப்பட்டுள்ளன. மோடியின் ஆதரவு பெற்ற மதவெறி - கார்ப்பரேட் கூட்டணியானது, கூட்டுக் களவாணிகளின் இந்த சூறையாடலுக்கு துணை போகிறது. கடனை திரும்பி செலுத்தாத இந்த களவாணிகளின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்க!