states

img

தில்லியில் கட்டடம் இடிந்து விபத்து: தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு- மீட்புப் பணி தீவிரம்

தென்மேற்கு தில்லியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகத் தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தில்லியின் சத்யநிகேதன் பகுதியில் இன்று பிற்பகல் 1.25 மணிக்கு திடீரென கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து தில்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிண்டெல்ஸ் பாரடிசோவின் 18 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரால் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

5 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.