புதுதில்லி, அக். 14 - பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், (பிஎஸ்என்எல்இயு), அந்த நிறு வனத்தின் சங்க அங்கீகார தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 32,000 வாக்குகள் பதிவான நிலையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் 15,311 வாக்குகளை பெற்றுள் ளது. மொத்தம் பதிவான வாக்கு களில் இது 48.62 சதவீதம் ஆகும். கடந்த முறை 43 சதவீத வாக்குகளை பெற்றிருந்த பிஎஸ்என்எல்இயு, இம்முறை 5 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று இருக்கிறது. இது மிகப்பெரும் சாதனை மட்டுமல்ல, 8வது தொடர் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வாக அமைந்துள்ளது. இரண்டாவது இடத்தில் என்.எப்.டி.இ சங்கம் 35 சதவீத வாக்குகளுட னும், மற்ற சங்கங்கள் 5 சதவீதம், அதற்கு கீழும் பெற்றுள்ளன. “பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மீது தங்களின் அளப்பரிய, அசையா நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு நன்றி. இந்தியா முழுமையும் எல்லா மட்டங்களிலும் - மாநிலம், மாவட்டம் - இப் பெருமை மிக்க வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து முன்னணி ஊழியர்களுக்கும் நன்றி” என சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யு குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய பாஜக அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது. அரசின் ஒவ்வொரு முயற்சியையும் மக்களி டையே அம்பலப்படுத்தி இடை விடாத போராட்ட இயக்கங்களை கட்டமைத்த மாபெரும் சங்கம் பிஎஸ்என்எல்இயு, ஊழியர்களின் நன்மதிப்பை தொடர்ந்து தக்க வைத்திருப்பது, இந்திய பொதுத்துறை நிறுவனங்களை பாது காப்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிற் சங்கங்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.