states

img

அமெரிக்கா, ஜெர்மனி கருத்தால் அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுடன் பாஜக வார்த்தைப் போர்!

புதுதில்லி, ஏப்.1 - ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரத்தில், அமெ ரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்களின் அதிருப்தியை வெளி யிட்டுள்ள நிலையில், “வெளி நாட்டுத் தலையீட்டை இந்தியா சகித்துக் கொள்ளாது; காங்கிரஸ் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை எதிர்பார்ப்பது சோகமயமான யதார்த்தம்” என்று ஒன்றிய பாஜக அரசு அழுது போலிக்கண்ணீர் விட்டுள்ளது. ராகுல் காந்தியின் பதவி பறிப்பு குறித்து, சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை முதன்மைத் துணைச் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்ப ளிப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படையாகும். அந்த வகையில், இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை அமெ ரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்று கூறியிருந்தார். இதேபோல, “இந்தியாவில் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் வாதிக்கு எதிராக முதல் முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய கருத்துகளை நாங்கள் கவனத்தில் கொண்டு இருக்கிறோம். அவரது, நாடாளுமன்ற எம்.பி. பதவி முடக்கம் பற்றியும் கவனத்தில் எடுத்து உள்ளோம். நாங்கள் அறிந்த வரை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கூடிய நிலையில் ராகுல் காந்தி இருக்கி றார் எனத் தெரிகிறது. அதன்பின், இந்த தீர்ப்பு நிலையான ஒன்றா அல்லது அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா என்பது பற்றி தெளி வாக தெரிய வரும். ராகுல் காந்தி யின் எம்.பி. பதவி நீக்க விவகா ரத்தில், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கை கள் பின்பற்றப்பட வேண்டும் என ஜெர்மனி நாட்டின் வெளியுற வுத்துறை செய்தித் தொடர்பாளரும் கூறினார்.

இதற்கு, “இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வெளி நாட்டு சக்திகளை அழைத்ததற்கு ராகுல் காந்திக்கு நன்றி. வெளி நாட்டுச் சக்திகள், இந்திய நீதித்துறை யில் செல்வாக்கு செலுத்த முடி யாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெளிநாட்டு தலை யீட்டை இந்தியா சகித்துக் கொள் ளாது. ஏனென்றால், நமது பிரதமர் பெயர் நரேந்திர மோடி” என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்திருந்தார். இந்நிலையில், கிரண் ரிஜிஜூ வுக்கு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் பவன்கேரா பதிலடி கொடுத்துள்ளார். அதில், “பிரதான பிரச்சனையில் இருந்து கிரண் ரிஜிஜுஏன் திசைதிருப்புகிறார்? அதானி குறித்து ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதம ரால் பதில் சொல்ல முடியவில்லை என்பதுதான் பிரச்சனை. மக்களை திசைத் திருப்புவதற்கு பதிலாக கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.