states

img

உத்தரப் பிரதேசத்தில் 6 மாதத்திற்கு குடியரசுத் தலைவர் ஆட்சி?

சுப்பிரமணியசாமி சூசகம்

புதுதில்லி, டிச. 24 - உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்ற யூகத்தை பாஜக மூத்த தலை வரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சி யை அமல்படுத்துவது, ஆதித்ய நாத்தை முதல்வர் வேட்பாளரிலிருந்து மாற்றுவதற்கும் உதவியாக இருக்கும் என்று சூசகமாக அவர் குறிப் பிட்டுள்ளார். 2021 துவக்கத்தில் கொரோனா சாவு களால் உ.பி. மாநிலம் திணறிப் போனது. பிணங்கள் கங்கையில் தூக்கி  வீசப்பட்ட நிலையில், முதல்வர் ஆதி த்யநாத்தின் நிர்வாகம் மீது பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களே குற்றச்சாட்டு வைத்தனர். அவரை மாற்ற வேண்டும் என்றும் கோரி க்கைகள் எழுந்தன. பிரதமர் மோடியும் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

எனினும், ஆர்எஸ்எஸ் தலையீட்டால் இப்போது வரை ஆதித்யநாத் தொடர்ந்து கொ ண்டிருக்கிறார். தேர்தல் வேலை களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், “ஒமைக்ரான் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டு, அதன் காரணமாக உத்த ரப் பிரதேச தேர்தல் ஒத்திவைக்கப் பட்டால் ஆச்சர்யப்பட வேண்டாம். செப்டம்பருக்கு தேர்தல் ஒத்தி வைக்க ப்பட்டு அதுவரை குடியரசுத் தலைவர் ஆட்சிகூட உத்தர பிரதேசத்தில் கொண்டு வரப்படலாம். இந்த வருட தொடக்கத்தில் நேரடியாக எதை பாஜக -வால் செய்ய முடியாமல் போனதோ, அதை அடுத்த வருட தொடக்கத்தில் பாஜக மறைமுகமாக செய்யும் வாய்ப்புகளும் உள்ளன” என்று சுப்பிரமணியசாமி பதிவிட்டுள்ளார்.  அலகாபாத் உயர் நீதிமன்றமும், உ.பி. சட்டமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது.