‘மீண்டும் வேண்டும் மோடி’ என பாஜக வினர் பிரச்சாரம் செய் கின்றனர். மீண்டும் மோடியே வருவார் என கார்ப்பரேட் ஊட கங்கள் காசு வாங்கிக் கொண்டு ஆரூடம் சொல்கின்றன. எப்படி எனக் கேட்டால் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா முன்னேறியி ருக்கிறது என பக்கம் பக்கமாக புள்ளி விபரங்களை அள்ளித் தெளிக்கின்றனர். சரி, அந்த புள்ளி விபரங்களில் ஏதாவது உண்மை யிருக்கிறதா என தேடிப்பார்த்தால் அது காலிப் பெருங்காய டப்பா கதையாகத்தான் இருக்கிறது. பொய் சொல்வது தானே அவர்கள் வாடிக்கை. இப்படித்தான் கடந்த தேர்தல்க ளின் போது விலைவாசியை குறைப்பேன் என்றும், வேலை வாய்ப்புகளை அளிப்பேன் என்றும் அளந்து விட்டார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? சொன்னதை செய்தாரா மோடி?
பின்வரும் ஆதாரங்களை அலசுவோம்:
1 மோடி ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்க ளோ இல்லையோ. ஆனால் பூண்டுக்கும் புல்லட் ப்ரூஃப் பாதுகாப்பு வழங்கப்பட் டுள்ளது. ஆம். ரூ.100 ற்கு விற்பனையாகிக் கொண்டி ருந்த பூண்டின் விலை ரூ.400 ஐ கடந்து போய்க்கொண்டி ருப்பதால், பூண்டு விவசாயி கள் கண்காணிப்பு காமிரா, துப்பாக்கி சகிதம் தூங்காமல் கொள்ளாமல் பூண்டு பயிரிட்ட நிலத்தை காவல் காக்கின்ற னர்.
2 இவர் ஆட்சிக்கு வருவ தற்கு முன்பு ரூ.72க்கு விற்ற பெட்ரோல் தற்போது ரூ.101 ஆகவும், டீசல் ரூ. 55 லிருந்து 92 ஆகவும் அதிகரித்து விட்டது. சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.401 லிருந்து 918.50 ஆக உயர்த் தப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் உலகச் சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்த பின்னரும் இந்தியா வில் இவற்றின் விலைகள் ஏறுவது எதனால்? இவர் பிரத மரான பின்பு பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட கலால் வரி ரூ.19.98 லிருந்து 32.90 ஆக வும், டீசலுக்கான கலால் வரி ரூ.15.83 லிருந்து 31.80 ஆக வும் அதாவது 88சதவீதம் அள வில் உயர்த்தப்பட்டிருக்கிறது. கலால் வரி மூலம் கிடைத்து வந்த வருவாய் ரூ.1.78 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.35 லட்சம் கோடியாக அதிகமாகி யுள்ளது. சாதாரண மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து உருவப் பட்ட பணம் தான் இது. ஒவ்வொரு குடும்பமும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக தங்கள் ஊதியத்திலிருந்து 16 சதவீதம் வரை எரிபொருள் தேவைக்காக செலவிடுகிறார்கள். தன்னை உலகத் தலைவன் (விஷ்வகுரு) என அழைத்துக் கொள்கிறார் மோடி. ஆனால் உலக நாடுக ளில் சமையல் எரிவாயு விலை யில் இந்தியா முதலிடத்திலும், பெட்ரோல் விலையில் மூன்றா வது இடத்திலும், டீசல் விலை யில் எட்டாவது இடத்திலும் உள்ளது. இது தான் உண்மை யில் மோடியின் சாதனையா கும்.
3 இது தவிர அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் 120 சதவீதம் வரை விலை அதி கரித்திருக்கிறது. அரிசி விலை ரூ.35 லிருந்து 60 ஆகவும், துவரம் பருப்பு ரூ.74 லிருந்து 140 ஆகவும், உளுந்தம் பருப்பு ரூ.79 லிருந்து 140 ஆக அதி கரித்துள்ளதாகவும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஏழை மக்கள் பயன்படுத் தும் அத்தியாவசிய மருந்து பொ ருட்களும் விலை உயர்விலிருந்து தப்பிக்கவில்லை. உதாரணமாக சாதாரண காய்ச்சலுக்கு பயன் படுத்தும் பாராசிட்டமால் மாத்திரை யின் விலை 94 பைசாவிலிருந்து ரூ.3.50 ஆக (248 சதவீதம்) அதி கரித்துள்ளது.
4 ரூ.1000 கோடிக்கு அதிக மாக சொத்து வைத்தி ருக்கும் 1007 குடும்பங்க ளிடம் வெறும் 2ரூ சொத்து வரி வசூலித்தாலே ஒவ்வொரு ஆண்டும் 1.84 லட்சம் கோடி ரூபாயை எளிதாக திரட்டி விட முடியும். ஆனால் அப்படியெல் லாம் வரி போட்டு அவர்களை பகைத்துக் கொள்ள மோடி ஒரு போதும் விரும்ப மாட்டார். வரம் கொடுத்த சிவனின் தலை யிலேயே கை வைத்த கதை யாக, வாக்களித்த மக்களிடம் சுரண்டுவது தான் மோடிக்கு எளிதான காரியம்.
5 ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு எனும் வாக்குறுதி யின் நிலையும் இதேதான். மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலை யின்மை உச்சத்தில் இருப்பதாக இந்திய பொருளாதார விவகா ரங்களுக்கான கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சமீப ஆண்டுகளில் 4.2 கோடித் தொழிலாளர்கள், அதாவது நாட்டின் மொத்த உழைப்புச் சந்தையில் 10 சதவீதம் பேர் வேலையை இழந்திருக்கிறார் கள். ஆறு கோடிக்கும் அதிகமா னோர் தாங்கள் ஏற்கனவே இருந்த வேலைகளை இழந்த தால் விவசாயப் பணிகளில் வேலை தேடி சென்று விட்டதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கி றது.
6 முறைசாரா துறைக ளின் அவலமான நிலை மையைப் போலவே தான் நிரந்தரமான வேலைகளிலும் உள்ளது. மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர் கள் எண்ணிக்கை 17.3 லட்சத்தி லிருந்து தற்போது 14.6 லட்ச மாக குறைந்திருக்கிறது. 2.7 லட்சம் பணியிடங்கள் காலி யாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதே காலத்தில் அரசு நிறுவனங்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 சதவீதத்தில் இருந்து 42.5 சதவீதமாக அதி கரித்திருக்கிறது. எந்தவித சமூக மற்றும் சட்டப் பாதுகாப்பு இல்லாத வேலையைத்தான் “அதிகரிக்கும் வேலைவாய்ப்பு கள்” எனும் அலங்காரத்தோடு அறிவிக்கிறார்கள் போலும்.
7 மத்திய அரசுத் துறை களில் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் மூலம் பணிக ளுக்கு ஆள் எடுக்கும் வேலை வாய்ப்புகளும் 80,650 லிருந்து 36,348 ஆக வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. பொ துத்துறை வங்கிகளில் பணி யாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 8.5 லட்சத்திலி ருந்து 7.25 லட்சமாக குறைந்து விட்டது. புதிதாக ஆளெடுப்பது இல்லை. வங்கி சேவைகளில் பிசினஸ் கரஸ்பாண்டென்ஸ் எனும் பெயரில் நிரந்தரமற்ற பணியில் சுமார் 35 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு எவ்வித சட்ட – சமூக பாதுகாப்பும் இல்லை.
8 ஐஎல்ஓ எனப்படும் சர்வ தேச தொழிலாளர் ஸ்தாப னம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் பல நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தான் அரசுத் துறை களில் பணியாற்றும் ஊழியர் கள் விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள் ளது. கியூபா 77சதவீதம், ரஷ்யா 40.6சதவீதம், சீனா 28சத வீதம், பிரிட்டன் 21.5சதவீதம் என அரசு வேலை வாய்ப்பு கள் இருக்க இந்தியாவிலோ அதன் எண்ணிக்கை வெறும் 3.8 சதவீதமாக உள்ளது.
உண்மை நிலைமைகள் இவ்வாறிருக்க, நாடு வளர்ந்து விட்டதாகவும், அமுதகாலத்தில் அனைவரும் திளைப்பதாகவும் கூறி போலி விளம்பரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.