தில்லி, செப்.27- பசுக்கூடங்களைப் பராமரிக்கும் “இஸ் கான்” நிறுவனம் இந்தியாவின் பெரிய மோசடி நிறுவனம் என்றும், அந்நிறுவனம் தான் பசுக்களை இறைச்சிக்காக விற்பதாகவும் பாஜக எம்பி மேனகா காந்தி பகிரங்கமாக குற் றம் சாட்டியுள்ளார். இஸ்கான் (International Society for Krishna Consciousness - ISKCON) நிறுவனம் பசுக்கூடங்களைப் பராமரிக்கும் சர்வதேச நிறு வனம் ஆகும். 800-க்கும் மேற்பட்ட கோவில் கள் மற்றும் தனி மையங்கள் மூலம் செயல் படும் நாட்டின் பெரிய நிறுவனங்களில் ஒன் றான “இஸ்கான்” மேற்குவங்க மாநிலம் நாடி யாவை தலைமையாகக் கொண்டதாகும். இந்நிலையில், பாஜக முன்னாள் ஒன் றிய அமைச்சரும், விலங்குகள் உரிமை ஆர்வ லரும், தற்போதைய எம்பியுமான மேனகா காந்தி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “ஹரே கிருஷ்ணா” இயக் கத்துடன் தொடர்புடைய ‘இஸ்கான்’ நிறு வனம், உலக அளவில் நூற்றுக்கணக்கான கோயில்களையும், மில்லியன் கணக்கில் பக் தர்களையும் கொண்டிருக்கிறது. பசுக்கூடங் களைப் பராமரிக்கும் இந்நிறுவனம், பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்திட மிருந்து பல்வேறு பலன்களைப் பெற்றுவரு கிறது. ஆனால் இந்த ‘இஸ்கான்’ நிறுவனம் இந்தியாவின் பெரிய மோசடி நிறுவனம் ஆகும். ஆந்திராவின் அனந்த்பூரில் ‘இஸ்கான்’ நிறு வனம் பராமரித்துவரும் பசுக்கூடத்துக்கு ஒரு முறை சென்றேன். அங்கு, பால் தராத பசுக் கள் மற்றும் கன்றுகள் எதுவுமே இல்லை. அப் படியென்றால், அவையெல்லாம் விற்கப்பட்டு விட்டன என்று அர்த்தம். அதாவது ‘இஸ்கான்’ தனது மாடுகளையெல்லாம் இறைச்சிக்கு விற் கிறது. “ஹரே ராம ஹரே கிருஷ்ணா’ என்று சாலைகளில் அவர்கள் பாடிக்கொண்டே செல் கிறார்கள். தங்களின் வாழ்நாள் முழுவதும் பாலைத்தான் நம்பியிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அளவுக்கு மாடுகளை யாரும் கசாப்புக் கடைக்காரர்களுக்கு விற்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
இஸ்கான் நிறுவனம் அலறல்
மேனகா காந்தியின் குற்றச்சாட்டிற்கு இஸ் கான் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்கான் நிறுவன தேசிய செய்தித் தொடர் பாளர் யுதிஷ்டிர் கோவிந்த தாஸ்,”இஸ்கான் நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பசுக்கள் மற்றும் காளைகளின் பாது காப்பு, பராமரிப்பு ஆகியவற்றில் முன்னணி யில் இருக்கிறது.விலங்குகள் உரிமை ஆர்வ லரும், இஸ்கான் நலன் விரும்பியுமான மேனகா காந்தியிடமிருந்து இவ்வாறான கருத் துகள் வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. அவ ரின், குற்றச்சாட்டுகளின்படி கசாப்புக் கடை களுக்கு பசுக்களோ, காளைகளோ எதுவும் விற்கப்படவில்லை. மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருக்கும் உலகின் பல பகுதி களில் பசுக்களைப் பாதுகாப்பதில் இஸ்கான் முன்னோடியாக இருக்கிறது” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.