கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 135 இடங்களில் வென்று தென்னிந்தியாவில் இருந்து பாஜகவை துரத்தியது காங்கிரஸ். முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப் பட்டனர். வெறும் 66 இடங்களில் வென்ற பாஜக எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், தேர்தல் முடிந்து 6 மாதம் ஆகியும் இன்னும் பாஜக தலைமை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யாமல் உள்ளது. இந்நிலையில் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலை யில், இந்த கூட்டத் தொடருக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தில்லி பாஜக தேசிய மேலிடம் அறிவிக்க வேண்டும் என்றும் அப்படி அறிவிக்காமல் போனால் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சொந்த கட்சி எம்எல்ஏ-க்களே தேசிய தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுள்ளதால் பாஜக கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.