பாஜக தலைவர் மகனுக்கு ஆயுள் தண்டனை
19 வயது இளம்பெண் பாலியல் வன்கொலை
பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷின் கங்கா - போக்பூரில் உள்ள வனந்த்ரா ரிசார்ட்டில் 2022ஆம் ஆண்டு செப்டம் பர் மாதம், ரிசார்ட் ஊழியரான அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம்பெண் கும்பல் பாலியல் வன்கொலை செய்யப் பட்டார். இந்த பாலியல் வன்கொலை தொடர்பாக பாஜக முன்னாள் தலை வரின் மகன் புல்கித் ஆர்யா, சவுரவ் பாஸ்கர், அங்கித் குப்தா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டுவார் நீதிமன்றத்தில் கடந்த 14 மாதங்கள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 3 பேரும் குற்ற வாளிகள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. தீர்ப்பின்படி பாஜக முன்னாள் தலைவரின் மகன் புல்கித் ஆர்யா, சவுரவ் பாஸ்கர், அங்கித் குப்தா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து கோட்டுவார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.