states

நாட்டின் அடிப்படை கொள்கைகள் மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது

புதுதில்லி, டிச. 29 - “இந்தியாவில் வளர்ச்சியை பரவ லாக்கியது காங்கிரஸ் கட்சிதான்” என்றும்; “நாட்டின் ஜனநாயகத்தை வலுப் ப்படுத்த காங்கிரஸ் கட்சியைச் சாராத 5 பேரை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டவர் ஜவகர்லால் நேரு” என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யின் 138-ஆவது நிறுவன தினம், புது தில்லியில் உள்ள கட்சியின் தலைமை யகத்தில் புதனன்று கொண்டாடப் பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்  காந்தி, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், மணிசங்கர் அய்யர், அம்பிகா சோனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியா இன்று முன்னேறி இருப்பதற்குக் காங்கிரஸ் கட்சிதான்  காரணம். பட்டியல் சமூக மக்கள்,  ஏழைகள் ஆகியோரை முன்னேற்று வதில் காங்கிரஸ் கட்சி காட்டிய முனை ப்பு காரணமாகவே வளர்ச்சி பரவலாக்க ப்பட்டது. இதேபோல், இந்திய ஜனநா யகம் வலிமையாக இருப்பதற்கும் காங்கிரஸ் கட்சிதான் காரணம். 

காங்கிரஸ் சாராத 5 அமைச்சர்கள்

பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, காங்கிரஸ் கட்சியைச் சாராத 5 பேரை தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். இதன்மூலம் அனைவருடனும் இணைந்து நாட்டை வலுப்படுத்த வேண்டும் எனும் கொள்கையை நடைமுறைப்படுத்திக் காட்டினார். ஆனால், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகள் தற்போது  தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரு கின்றன. நாடு முழுவதும் ஒருவித  வெறுப்பு அரசியல் பரவிக்கொண்டி ருக்கிறது. ஒன்றிய அரசின் தவறான செயல்பாட்டால் பணவீக்கமும் வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்திருக் கிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், ஒன்றிய அரசு இதுகுறித்து கவலைப்படு வதில்லை.  அனைவரையும் உள்ளடக்கிய அரசியல்தான் காங்கிரசின் அரசியல். இந்த பணியை ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். இந்த  யாத்திரை, எதிர்தரப்பை பதற்றப்பட  வைத்துள்ளது. நாட்டை ஒருங்கி ணைக்கும் நோக்கிலான இந்த யாத்தி ரையில் நாட்டு மக்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கிறேன்.’’  இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசியுள்ளார்.