புதுதில்லி, ஜூன் 19 - கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில், இந்தியாவில் அரசியல், சமூக, பொருளாதார ஸ்திரமின்மையை பாஜக ஏற்படுத்தியிருப்பதாக ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி யில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் உள்ள பாஜக-வைத் தோற்கடிக்க முடி யும் என்பதற்கு உதாரணமாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது. எனினும், 2024 மக்க ளவை தேர்தலைப் பற்றி பேசுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், மக்களவைத் தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும். 2024 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று 3-ஆவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு, எதிர்க்கட்சிகளுக்கு பொது வான நோக்கம், அதைப் பிரதி பலிக்கும் வகையிலான செயல்பாடு கள், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகிய 3 பண்புகள் இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் இடையே வேறு பாடுகள் அதிகம் என்பது மிகைப் படுத்தப்பட்ட கூற்று. உதாரணமாக, ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரி யானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பாஜக-வுக்கு நேரடி போட்டியாக காங்கிரஸ் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மேற்கு வங்கம் போன்ற காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி அர சாங்கங்கள் இருக்கும் மாநிலங்களில் எந்த விதமான மோதலும் ஏற்படாத சில தொகுதிகள் மட்டுமே இருக்கும். அதேபோல், தமிழகத்தில் திமுக-வும், காங்கிரசும் பல தேர்தல்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இணைந்து போட்டியிட்டு வருகின்றன. தெலுங்கானா, ஆந்திராவில் எந்த எதிர்க்கட்சி கூட்டணியும் இருக்க வாய்ப்பில்லை என்பதால் பிரச்சனை இருக்காது. பீகாரிலும் எந்த பிரச்ச னையும் இருப்பதாக நான் நினைக்க வில்லை. எதிர்க்கட்சி கூட்டணி குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, இந்தியா வுக்கான புதிய தொலைநோக்குப் பார்வையைப் பற்றி பேச வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலானது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதி ரானதாக இருக்கக் கூடாது. மாறாக அவர் நிலைநாட்ட விரும்பும் சித்தாந்தத்துக்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஸ்திரத்தன்மையை கொண்டு வருவேன் என பிரதமர் மோடி வாக்கு றுதி அளித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆனது? மணிப்பூரில் என்ன நடக்கிறது ..? ஒன்றிய அரசு தனது சூழ்ச்சிகள் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சீர்குலைப்பதால் ஆட்சியில் ஸ்திரத்தன்மை ஏற்படாது. இது நாட்டில் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கான விதைகளைத்தான் விதைத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் நியாயமான அரசியல் ஸ்திரத்தன்மை வழங்கப்பட்டதால் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டது.” இவ்வாறு கபில் சிபல் கூறியுள்ளார்.