states

img

தரவுகளை அழிக்கும் பணியில் பாஜக அரசு

புதுதில்லி, ஜூலை 30 - பாஜக ஆட்சியின் மோசமான சூழ லை புள்ளிவிவரங்கள் வெளிப் படுத்துவதால் புள்ளிவிவரங் களையே அழிக்கும் பணியில்  மோடி அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.அதன் ஒரு பகுதியாக மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வ தேச நிறுவனத்தின் (IIPS)இயக்கு னர் கே.எஸ்.ஜேம்ஸை எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் இடை நீக்கம் செய்துள்ளது ஒன்றியஅரசு. மக்கள் நலத் திட்டங்களை முறை யாக நிறைவேற்றுவதில்  புள்ளிவிவ ரங்களின் பங்கு  மிக முக்கியமான தாகும். புள்ளிவிவரங்கள் அடிப் படையிலேயே வளர்ச்சியில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து முறைப்படி  திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். ஆனால் பாஜக ஆட்சியில் இந்த புள்ளி விவரங்கள் எதுவும் முறை யாக பராமரிக்கப்படுவதில்லை. ஆட்சிக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளிலேயே பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பய ணத்திற்கு அவர்கள் செலவிட்ட பயணச் செலவுகளின் விவரங்கள் பெரும் கேள்விகளை எழுப்பியது. அதனை தொடர்ந்து பாஜக அரசு தொடர்ச்சியாக புள்ளிவிவரங்களை கைவிடத் துவங்கியது. பல நேரங் களில் எதிர்க்கட்சிகளின் கேள்வி க்கு புள்ளிவிவரங்கள் இல்லை என்று கைவிரிக்கத் துவங்கியது. இத னாலேயே ‘தரவுகள் இல்லாத அரசு ( No data available government)’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தன. ஆனால் தற்போது தரவுகளை அழிப்பதில் பாஜக அரசு கவ னத்தை செலுத்தி வருகிறது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தான் தற்போது  மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறு வன (IIPS)இயக்குனர் கே.எஸ்.ஜேம்ஸை அவர் தலைமையில் நடக்கும் ஆய்வுகளில் வரும் புள்ளி விவரங்கள் திருப்திகரமாக இல்லை  என்று கூறி அவரை இடைநீக்கம் செய்துள்ளது. உண்மையில் பாஜக  அரசின் குறைகளை புள்ளி விவரங்கள் மூலம் அம்பலப்படுத்தி யதாலேயே அவரை இடைநீக்கம் செய்துள்ளது அரசு. குறிப்பாக பாஜக 2019 ஆம் ஆண்டு திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற வாக்கு றுதியைக் கொடுத்து அதை விளம்பரப் படுத்துவதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்து  வந்தது. அந்த திட்டம் வெற்றி பெற வில்லை மேலும் மக்கள் நல நோக்கில் அது செயல்படுத்தப்பட வில்லை. அந்த திட்டத்தின் மூலமாக  பல ஆயிரம் கோடிகள் வீணடிக்கப் பட்டன என நாடு முழுவதும் பர பரப்பாக பேசப்பட்டது.இந்த பர பரப்பிற்கு அடித்தளமிட்டது தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS -5) வெளியிட்ட தரவுகள் ஆகும்.இந்தியா முழுவதும் 19 சதவீதமான குடும்பங்கள்  திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையில் தான் உள்ளார்கள் என்பதை அது அம்பலப்படுத்தியது. இந்த ஆய்வு மோடி அரசின் போலித் தனத்தை அம்பலப்படுத்தியது. 

மேலும் 2018 ஆம் ஆண்டு போஷன் அபியான் என்ற திட்டத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் நோக்கம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை அதிகரித்து ஆண்டு தோறும் ரத்த சோகையை 3 புள்ளிகளாக குறைப்பதே.ஆனால் தேசிய குடும்பநல ஆய்வு - 4 (2015-2016) எடுக்கப்பட்ட பொது இருந்த ஊட்டச்சத்து குறைபாட்டை விட, ஆய்வு 5 ல் அதிகளவிலான குழந்தை கள் பாதிக்கப்பட்டு இருப்பதை அம்பலப்படுத்தியது. இது போன்று பல்வேறு தரவுகள் மக்களின் புருவங்களை உயர்த்த வைத்தது. திட்டங்களுக்கு பாஜக அரசு ஒதுக்கீடு செய்த பல ஆயிரம் கோடிகளில் ஊழல்  நடந்துள்ளது குறித்தான கேள்வி கள் எழ துவங்கின.  இதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு வேலையின்மை குறித்தான தரவுகளை வெளியிடாமல் முடக்கி வைத்தது. அதுமட்டுமல்ல, வரும் நாட் களில் நடைபெற இருக்கும் தேசிய குடும்ப நல ஆய்வில் ரத்த சோகை குறித்தான விவரங்களை இணைக்க அனுமதிக்கவில்லை.தான் எடுக்கும் புள்ளி விவரங்களே தனது ஆட்சியின் மோசமான நிலை யை அம்பலப்படுத்தி விடுவதால் அந்த பணியை ஒட்டுமொத்தமாக முடக்கும் பொருட்டே, கே.எஸ். ஜேம்ஸை இடைநீக்கம் செய்துள் ளது என்ற விமர்சனம்எழுந்துள்ளது.

தாமஸ் ஐசக் கண்டனம்

சுகாதாரத்துறையின் முக்கிய அதிகாரியான கே.எஸ்.ஜேம்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டது முற்றி லும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என மோடி அரசுக்கு கேரள முன்னாள் நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் விமர்சித்துள்ளார். “உங்கள் முகம் விகாரமாகத் தெரிந்தால் கண்ணாடியை குற்றம்சாட்டுங்கள். அதைத்தான் மோடி செய்து கொண்டிருக்கிறார். 19% பேர் திறந்த வெளியை இன்னும் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். 40% பேருக்கு சுத்தமான சமையல் எரி பொருள் கிடைக்கவில்லை. ரத்த சோகை அதிகரிப்பு என ஆய்வு  விவரங்களை தேசிய சுகாதார குடும்ப ஆய்வறிக்கை வெளி யிட்டது. அந்த ஆய்வை வெளியிட்ட அமைப்பின் இயக்குநர் தான் கே.எஸ்.ஜேம்ஸ். அதற்காகத்தான் அவர் பழிவாங்கப்பட்டுள்ளார்” என தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.