states

img

தமிழகத்துக்கு பாஜக துரோகம்

கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சிஏஜி அறிக்கை மூலம் கடந்த 9 ஆண்டுகளில் பாஜக எத்தனை லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என்பது தற்போது வெளிவந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். தஞ்சாவூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றக் கூட்டத்  தொடரின் கடைசி நாளில் ஒன்றிய அர சின் சிஏஜி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஏழு ஊழல்கள் அம்ப லப்பட்டுள்ளன. இந்த ஒரு அறிக்  கையில் மட்டுமே பாஜக ரூ. 7.50  லட்சம் கோடி ஊழல் செய்திருப்பது வெளிவந்துள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் பாஜக  அரசு எத்தனை லட்சம் கோடி ஊழல்  செய்திருக்கும் என்பது தெரிய வரு கிறது. மேலும், இது ஊழல் ஆட்சி என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை? இதற்கு காரண மான நெடுஞ்சாலை துறை அமைச்  சர் நிதின் கட்காரியை பதவி நீக்கம்  செய்ய வேண்டும். இது தொடர்பாக  விசாரணை நடத்த வேண்டும். இந் நிலையில் தமிழ்நாட்டில் திமுக மீது  ஊழல் புகார் தெரிவித்து அண்ணா மலை நடைபயணம் மேற்கொள் வது எந்த வகையில் நியாயம்? விலை உயர்வு, ஒன்றிய அரசின்  ஊழலை கண்டித்து தமிழகம் முழு வதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்  7 ஆம் தேதி வரை பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. நிறைவு நாளான 7 ஆம் தேதி ஒன் றிய அரசு அலுவலகங்கள் முன் மறி யல் போராட்டமும், ரயில் மறியல்  போராட்டமும் நடத்தப்படவுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், காவிரி நீர் இல்லாததால் ஒரு  லட்சம் முதல் 1.5 லட்சம் வரை யிலான ஏக்கரில் நெற்பயிர்கள்  கருகிவிட்டன. இதனால் விவசாயி கள் மிகப் பெரும் இழப்புக்கு ஆளா கியுள்ளதால், ஏக்கருக்கு ரூ. 35 ஆயி ரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாய் திறக்காத அதிமுக

மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்  நிலையில் கர்நாடகம் தமிழ கத்துக்கு தர வேண்டிய 40 டிஎம்சி  தண்ணீரை தர மறுப்பது எந்த  வகையில் நியாயம்? உச்சநீதி மன்றத்துக்கு பயந்து தற்போது கர்  நாடகம் 10 டி.எம்.சி மட்டும் தண்ணீர்  தருவதாகக் கூறுவது ஏற்கத்தக்க தல்ல. இந்நிலையில் பாஜக முன் னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தண்ணீர் விடக்கூடாது எனக் கூறி போராட்டத்தை அறி வித்துள்ளார்.  அகில இந்திய கட்சியான பாஜக  இப்படி ஒரு போராட்டத்தை அறி விப்பது எந்த வகையில் நியாயம்? இதன் மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்  கிற, துரோகம் செய்கிற கட்சி  என்பதை பாஜக மீண்டும் நிரூபித் துள்ளது. இதற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக ஏன் வாய் திறக்கவில்லை? தமிழ்நாட்டில் நான்குநேரி, வேங்கைவயல், கோவில்பட்டி, அணைக்கரை என பட்டியல் இன  மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்கு தல் நிகழ்ந்து வருகிறது. இச்சம்ப வங்களில் நடவடிக்கை எடுக்கப் படாததால், அடுத்தடுத்து சம்ப வங்கள் நிகழ்கின்றன. எனவே தமி ழக அரசும், காவல் துறையும் உரிய  நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்தடுத்து இதுபோன்ற சம்ப வங்கள் நிகழாது. அண்ணாமலை நடைபயணம் தமிழகத்தில் எந்தவித தாக்கத்தை யும் ஏற்படுத்தாது. தமிழகத்துக்கு விரோதமாக செயல்படும் பாஜக  எது செய்தாலும் மாற்றம் இருக்  காது என்றார் கே.பாலகிருஷ்ணன். அப்போது மாவட்டச் செயலா ளர் சின்னை. பாண்டியன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர். மனோ கரன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரச் செயலா ளர் என்.வடிவேலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.