காசர்கோடு மக்களவைத் தொகுதிகளில் எல்டிஎப் ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட சிஏஏ எதிர்ப்பு வெகுமக்கள் பேரணிகளும் பெரும் பங்கேற்பைக் கண்டன. முப்பதாண்டுகளுக்கும் மேலாக இத்தொகுதி இடதுசாரிகளிடம் இருந்தது. கடந்த முறை இழந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எங்கும் உள்ளது. சிறு பான்மையினர் கவலையுடன் பார்க்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் இத்தொகுதியில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. கேரளத்தை இழிவுபடுத்தும் வகையில் சங்பரிவாரால் பரப்பப்படும் ‘கேரளா ஸ்டோரி’ முஸ்லிம் லீக் தரப்பிலும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. என்ஐஏ சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட விவகாரங்களில் மக்களவையில் பாஜக அரசுக்கு மவுன ஆதரவு அளித்த தற்போதைய எம்பிக்கு எதிராக சிறு பான்மையினரிடம் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எம்பியின் சிஏஏ நிலைப்பாட்டை கேலி செய்யும் பதிவுகளால் சமூக ஊடகங்க ளும் நிரம்பியுள்ளன. பாலகிருஷ்ணன் மாஸ்டருக்கு மக்கள் அளித்துவரும் மாபெரும் வரவேற்பு அவரது வெற்றியை பறைசாற்றுவதாக உள்ளது.