பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக இயங்கிய பிரபல முற்போக்கு பத்திரிகையாளரான கெளரி லங்கேஷ் கடந்த 2017ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்துத்துவா குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொ டர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட னர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கெளரி லங்கேஷை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மோகன் நாயக்கிற்கு கர்நாடக உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இதே வழக்கில் கைதான அமித் திக்வேகர், கே.டி.நவீன் குமார், சுரேஷ் எச்.எல் ஆகியோருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 6 ஆண்டுகளாக மூன்று பேரும் சிறையில் உள்ளதாலும், வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததாலும் 3 பேருக்கும் ஜாமீன் வழங்குவதாக கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.விஸ்வஜித் ஷெட்டி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டு 7 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழு மையாக விசாரணை முடிவடையாமல் 574 சாட்சிகள் இருந்தும் கொலைக் குற்ற வாளிகள் அடுத்தடுத்து ஜாமீனில் விடு விக்கப்படுவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.