states

img

பகிரங்க மன்னிப்பு கோரியது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரும், யோகா சாமி யாருமான பாபா ராம்தேவ்  மற்றும் தனக்கு நெருக்க மான ஆச்சார்யா பால கிருஷ்ணா உடன் இணைந்து  2006இல் என்ற பதஞ்சலி  நிறுவனத்தை தொடங்கி னார். இந்நிறுவனம் 2006இல் தொடங்கப்பட்டாலும் மோடி  பிரதமர் ஆன பின்பே பன்  னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்  திற்கு ஈடாக பிரம்மாண்ட தொழிற்சாலையை கட்டி, இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது என்று  கூறி தேன், டூத் பேஸ்ட், சோப்  புகள், ஷாம்பு, ஊட்டச்சத்து பொருட்களை விற்பனை செய்ய தொடங்கியது. தரத்  தில் சந்தேகம் உள்ளதால்  நாட்டு மக்கள் பதஞ்சலி பொருட் களை கண்டுகொள்ளாத நிலையில், தனது வணி கத்தை மேம்படுத்த அலோ பதி (ஆங்கில மருத்துவம்) மருத்துவம் கூட தீர்க்க முடி யாத தீராத நோய்களை தங்க ளது பதஞ்சலி மூலிகைப் பொருட்கள் தீர்ப்பதாக விளம்பரங்களை வெளியிட் டது பதஞ்சலி நிறுவனம்.  இதற்கு எதிர்ப்பு தெரி வித்த இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த  வழக்கு தொடர்பாக பதஞ் சலி நிறுவனத்திற்கு 2 முறை  உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.  இந்நிலையில், தடுப் பூசிக்கு எதிராக பாபா ராம் தேவ் அவதூறுப் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டி  இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்தது. இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கு தொடர்  பாக பதஞ்சலி நிறுவனம் தொடர்ச்சியாக உச்சநீதி மன்றத்தில் பதிலளிக்காமல் உள்ளது. இதனால், பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால கிருஷ்ணா மீது ஏன் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு  தொடரக் கூடாது என கேள்வி கள் எழுப்பி, ஏப்ரல் 2 அன்று  இருவரும் ஆஜராக வேண் டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில், வியாழ னன்று உச்சநீதிமன்ற நோட்  டீஸிற்கு பதிலளித்த பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார். மேலும் மருத்து வம் தொடர்பாக தவறான தக வல்களை விளம்பரம் செய்த  விவகாரத்திலும் பதஞ்சலி  நிறுவனம் மன்னிப்பு கோரி யுள்ளது. விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல் களை வெளியிட மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.