பாட்னா, ஜூலை 1 - மருத்துவப் பயன்பாட்டிற்காக, எலும்புகளை தொழிற்சாலைக்கு ஏற்றிச் சென்ற முஸ்லிம் ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டம் மஜ்வாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாஹிருதீன். வயது 55. மாற்றுத் திறனாளியான இவர், குடும்ப வறு மைக்காக கனரக லாரி ஓட்டி வந்தார். இந்நிலையில், கடந்த புதனன்று, பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலை ஒன்றுக்கு, மருத்துவப் பயன்பாட்டிற் காக, எலும்புகளை ஏற்றிச் சென்றுள் ளார். அவருடன், உதவியாளர் குர்ஷித் அலியும் சென்றுள்ளார். இதனிடையே, லாரியில் ஏற்பட்ட கோளாறையொட்டி, சரண் மாவட்டம் கோரி பகர் என்ற கிராமத்திற்கு அருகில் நிறுத்தியுள்ளார். பின்னர், தனது உதவியாளருடன் சேர்ந்து, மெக்கானிக்கை வரவழைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அப்போது, அங்கிருந்த சிலர், லாரியில் இருந்து கடுமையான, துர் நாற்றம் வீசியதால், மாட்டிறைச்சி தான் கொண்டு செல்லப்படுவதாக சந்தேகமடைந்து, சுற்றி வளைத்துள் ளனர். ஜாஹிருதீன் அவர்களிடம் எவ்வ ளவோ விளக்க முயன்றுள்ளார். ஆனால், அதற்கு எந்த வாய்ப்பையும் அளிக்காத அந்த மாட்டுக் குண்டர்கள், ஜாஹிருதீனைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்துள்ளனர். உடனிருந்த குர்ஷித் அலி, அவர்களிடமிருந்து தப்பிய நிலையில், ஜாஹிருதீன் மட்டும் சிக்கிக் கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் அவரை, அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்து வர்கள் ஜாஹிருதீன் இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளி முஸ்லிம் ஓட்டு நர் ஒருவர், பசு குண்டர்களால், அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. “மர்ஹவுரா என்ற தொழிற்சாலை, மருத்துவ நோக்கங்களுக்காக எலும்பு களைப் பயன்படுத்துவதற்கு உரிமம் பெற்ற தொழிற்சாலையாகும். இந்த தொழிற்சாலைக்குத்தான், ஜாஹிரு தீன் எலும்புகளை எடுத்துச் சென்றுள் ளார். இது ஒரு வழக்கமான விஷயம்” என்று சரண் காவல்துறை கண்காணிப் பாளர் கவுரவ் மங்லா கூறியுள்ளார். மேலும், இந்த கும்பல் படுகொலை தொடர்பாக, “நாங்கள் உடனடியாக நட வடிக்கை எடுத்து 7 பேரை கைது செய் துள்ளோம்” என்றும் தெரிவித்துள் ளார். பீகார் மாநிலம், சரண் நகரில் மார்ச் மாதத்திற்குப் பிறகு நடக்கும் இரண்டாவது கும்பல் படுகொலை சம்பவம் இதுவாகும். மார்ச் 7 அன்று, மாட்டிறைச்சி விற்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நசீம் குரேஷி (54) கொல்லப்பட்டார். குரேஷி தாக் கப்பட்ட சில மணிநேரங்களில் இறந்தார். அப்போது அந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.