states

சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ‘காப்பீட்டு ஊழல்’ வழக்கில் விளக்கம் கேட்பு

புதுதில்லி, ஏப்.28- ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,200 கோடி மதிப்பிலான அரசு ஊழியர்கள் மற்றும் சிவில் பணிக்கான குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தங் களை வழங்கியதில் சத்யபால் மாலிக் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர் பாக சிபிஐ அவரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது.  2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநி லம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்த வாக னங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என்று பிரதமர் மோடியிடம் கூறியதாக வும், ஆனால் அதைப்பற்றி பேசாமல்  வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு தன்னிடம் பிரதமர் அறிவுறுத்தியதாக வும் சத்யபால் மாலிக் அண்மையில் கடும் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். இந்நிலையில் ஆத்திரமடைந்த மோடி அரசின் தூண்டுதலால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் கவர்ன ராக சத்யபால் மாலிக், இருந்த போது  நடந்ததாகக் கூறப்படும் காப்பீட்டு ஊழல் வழக்கில் (சாட்சி) சிபிஐயால் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஜம்மு  & காஷ்மீரில் ரூ.2,200 கோடி மதிப்பி லான அரசு ஊழியர்கள் மற்றும் சிவில் பணிக்கான குழு மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான ஒப்பந்தங்களை வழங்கியதில் மாலிக் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ  இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் டிரினிட்டி ரீ-இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் லிமிடெட் மீது இரண்டு முதல் தகவலறிக்கை களைப்  பதிவு செய்துள்ளது.  இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சத்யபால் மாலிக்கிடம் விசா ரிக்க சிபிஐ குழு ஒன்று வெள்ளிக்கிழ மை காலை 11.45 மணியளவில் தில்லி ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள அவரது சோம் விஹார் இல்லத்திற்கு வந்து காப்பீட்டு ஊழல் தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டுள்ளது.  பீகார், ஜம்மு-காஷ்மீர், கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் மாலிக் கவர்னராக இருந்துள்ளார். சத்ய பால் மாலிக் இதுவரை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராகவோ அல்லது சந்தேக நபராகவோ இல்லை  என சிபிஐ தெரிவிக்கிறது. பல்வேறு மாநிலங்களின் கவர்னராகப் பணி யாற்றிய மாலிக்கிடம் சிபிஐ விசாரணை நடத்துவது இது இரண்டாவது முறை யாகும். பிடிஐ தகவல்களுடன்