புதுதில்லி, மார்ச் 23- அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பஞ்சாப் தவிர, ஏனைய உ.பி., உத்தர் கண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களும் பாஜக-வே வெற்றிபெற்று, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி தான் காரணம் என்பதை கூறும் வகை யில்- பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண் டாவது அமர்வு துவங்கிய முதல் நாளன்று, நாடாளுமன்றத்திற்குள் அடி யெடுத்து வைத்த பிரதமர் மோடியை பாஜக உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி, ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்பி வரவேற்றனர். இது அப்போதே எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், 2022-23 நிதி யாண்டிற்கான சிவில் விமானப் போக்கு வரத்து அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், பாஜக எம்.பி. மஹூவா மொய்த்ரா, பிர தமர் மோடி வரவேற்கப்பட்ட விதத்தை கடுமையாகச் சாடி யுள்ளார். “ஒன்றிய பாஜக அரசானது, நாடா ளுமன்றத்தை ரோமின் கொலோசிய மாக (Rome’s Colosseum) மாற்றி யுள்ளது.
இங்கு பிரதமர் நரேந்திர மோடி ‘மோடி, மோடி’ என்ற கோஷங் களுக்கு இடையே ஒரு ’கிளாடியேட் டர்’ (gladiator) போல வருகிறார். “முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்,1972-இல் எம்.பி.யாக இருக்கையில் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது, ‘இந்தக் காலத்தில், புது தில்லியில் நிலவும் சூழல் ஒருவரை மூச்சுத் திணற வைக் கிறது. இப்போதெல்லாம் சுதந்திரமாக சுவாசிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. எங்கும் பிரதமரின் பெயர் மட்டுமே உச்சரிக்கப்படுகிறது. அகில இந்திய வானொலியில், காலை முதல் இரவு வரை சினிமா பிரச்சாரம் போல, பிர தமர் பெயர் மட்டுமே அடிக்கடி ஒலிப் பரப்பப்படுகிறது. இப்படியான நிலை யில், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இதை தாண்டி எப்படி ஆக்கப்பூர்வ மான காரியங்களுக்காக போராட முடி யும்?’ என்று கேள்வி எழுப்பினார். அந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த கட்சிதான் (பாஜக), இன்று இந்த நாடா ளுமன்றத்தை 1-ஆம் நூற்றாண்டில் ரோமில் உள்ள கொலோசியமாக மாற்றியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய சோகம் என்னவென்றால், மோடி, மோடி என்ற கோஷங்களுக்கு இடையில் நாம் இருக்கிறோம்” என் பதுதான்” என்று மஹூவா மொய்த்ரா விளாசினர்.
“உண்மையில் கைதட்டலுக்குத் தகுதியான சில பெயர்களை உச்ச ரிக்க விரும்புவதாக கூறி, விமானி அனுமதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஊர்மிளா பரேக், முதல் பெண் வணிக விமானி பிரேம் மாத்தூர், இந்திய விமான நிறுவனங்களின் முதல் பெண் விமானி துர்பா பானர்ஜி, போர் மண்டலத்தில் பறந்த முதல் பெண் இந்திய விமானப்படை அதி காரி (IAF) குஞ்சன் சக்சேனா, போயிங் விமானத்தின் முதல் கேப்டன், சவு தாமினி தேஷ்முக் மற்றும் சிவில் ஏவி யேஷன் வரலாற்றில் மிக இளம் வயது பைலட் பெண்கள் குழுவினை கொண்ட வணிக ஜெட் விமானத்தை இயக்கும் நிவேதிதா பாசின்” ஆகி யோரை மொய்த்ரா பட்டியலிட்டார். முன்னதாக மொய்த்ரா குறிப்பிட்ட கொலோசியம் என்பது ரோம் நகரில் உள்ள ஒரு சுற்றுலா தலம். இது ஒரு நீள் வட்ட வடிவக் கட்டடம். இதற்கு கூரை கிடையாது.
அந்தக் கால ரோமப் பேரரசில் யாராவது இறந்தால் அந்தச் சவ ஊர்வலத்தின் முன்பு மூன்று சண் டைகள் நடக்கும். அப்படிச் செய்தால் தான் இறந்தவரின் ஆத்மா சாந்தியடை யும் என்ற நம்பிக்கை இருந்தது. இதைப் பிற்காலத்திய அரசர்கள் ஒரு விழா வாகக் கொண்டாடத் தொடங்கினர். அடிமைகளும் கைதிகளுமே சண்டை யிடுபவர்களாக இருந்தனர். இந்தச் சண்டைக்காகக் கட்டப்பட்டதே கொலோசியம். இதில் சண்டையிடு பவர்கள் கிளாடியேட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவை மக்க ளுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி களாக இருந்தன. பார்வையாளர் களுக்குத்தான் பொழுதுபோக்கு. பங்கு பெறுபவர்களுக்கு இது உயி ரைப் போக்கும் நிகழ்வாக இருக்கும். இதைத் தான் மொய்த்ரா, தனது பேச் சில் எடுத்தாண்டுள்ளார்.