states

img

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் உறுதி!

லக்னோ, ஜன.12- உத்தரப் பிரதேசத்தில் மேலும் 13 எம்எல்ஏ-க்கள் பாஜக-விலிருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் சேர வுள்ளதாகவும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச பாஜக அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, தனது பத வியை ராஜினாமா செய்துவிட்டு, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள் ளார். அவருடன், ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாகர், வினய் சாக்யா ஆகிய 4 எம்எல்ஏ-க்களும் பாஜக-விலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். திங்களன்று 4 மணி நேர இடை வெளியில் மட்டும் 1 அமைச்சர் உட்பட 4 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இருந்து வெளியேறி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

இவர்கள் அனைவ ருமே ஓபிசி பிரிவினர் மத்தியில் மிக முக்கியமான தலைவர்களாக இருப்ப வர்கள் ஆவர். கடந்த 3 மாதத்தில் மட்டும், இவர் களைப் போன்ற 10 ஓபிசி, எஸ்.சி./எஸ்.டி. பிரிவு தலைவர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்து உள்ள னர். பக்ரைச் தொகுதி எம்எல்ஏ மாதுரி வெர்மா, பதாயுன் தொகுதி எம்எல்ஏ ராதா கிருஷ்ண சர்மா, சந்த் கபிர் நகர் எம்எல்ஏ திக்விஜய் நாராயண் சவுபே ஆகியோரும் பாஜகவிலிருந்து இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இந்நிலையில்தான், உத்தரப்பிர தேசத்தில் மேலும் 13 எம்எல்ஏ-க்கள் பாஜகவிலிருந்து சமாஜ்வாதிக்கு வரவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷூ டன் இணைந்து சரத் பவார் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அப்போதுதான், “உ.பி. சட்ட மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜக அமைச்சரான சுவாமி பிர சாத் மவுரியா, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து விட்டார். மேலும் 13 எம்எல்ஏ-க்கள் பாஜக-வில் இருந்து சமாஜ்வாதி கட்சியில் இணையவுள்ள னர்” என்று சரத் பவார் தெரிவித்துள் ளார். “உத்தரப் பிரதேசத்திலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரப் போகிறது. வகுப்புவாத பிரிவினை வாதம் உத்தரப் பிரதேசத்தில் தலை தூக்கி இருக்கிறது. இதற்கு அம்மாநில மக்கள் சரியான பதிலடி தரப்போகி றார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.