states

img

ஜேஎன்யு-வில் ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்!

சிபிஎம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏபிவிபி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் நாசர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை பெரியார் படம் உள்ளிட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் கூட மீண்டும் தாக்க முயன்றுள்ளார்கள் ஏபிவிபி அமைப்பினர். பல்கலைக் கழகத்திற்குள் படிப்பதற்கும், பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடக்கவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் ஏ‌பிவிபி அதனை முடக்க முயல்கிறது. பல்கலைக் கழக நிர்வாகம் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நிர்வா கத்தை நடத்துவதே ஏபிவிபி பரிவாரம் தானா? என்ற கேள்விதான் எழுகிறது. இதற்கு முன்பும் கூட ஏபிவிபி அமைப்பினர், வெளியில் இருந்து குண்டர் களை அழைத்து மாணவர் தலைவர்‌கள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இப்போது‌ அந்த வன்முறையை தமிழ்நாட்டு மாணவரை நோக்கி நடத்தி யுள்ளனர். பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேஎன்யு பல்கலைக் கழகம் அனைவருக்குமான இடமாக ஜனநாயகத்து டன் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

புதுதில்லி, பிப். 20 - தலித் மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடிய, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஆர்எஸ் எஸ்-சின் மாணவர் பிரிவான ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். காரல் மார்க்ஸ், லெனின், பெரியார் படங் களையும் அடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் ஐஐடி-யில் ‘பி.டெக்’ முத லாமாண்டு படித்து வந்த 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி, கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். அவர் ஐஐடி  விடுதியின் 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப் பட்டது. ஆனால், தற்கொலை குறிப்பு எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், தர்ஷன் சோலங்கி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று அவரது சகோதரி ஜான்வி உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியிருந்தனர். ஒருவேளை தர்ஷன் தற்கொலையே செய்து கொண்டிருந்தாலும், மும்பை ஐஐடி-யில் அவர் எதிர்கொண்டு வந்த சாதி ரீதியான பாகுபாடு, தீண்டாமை, சித்ரவதைகள் மற்றும் அதன் அவமானமே தர்ஷன் சோலங்கியின் மரணத்திற்கு காரணம் என்று ஏபிபிஎஸ்சி (APPSC) எனப்படும் ‘அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டத்தை’ சேர்ந்த மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தனர்.

இதன் பின்னணியில், தலித் மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணத்திற்கு நீதிகேட்டு நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பேரணிகளை நடத்தி வந்தனர். இதனொரு பகுதியாக, தில்லி ஜவகர்ஹால் நேரு பல்கலைக்கழகத்திலும், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று மாலை ஊர்வலம் நடைபெற்றுள்ளது.  இந்த ஊர்வலம் முடிந்த பின், 30-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரி யாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். அதன்பின்னர் இரவு 9 மணியளவில் அங்குள்ள மாணவர் செயற்பாட்டு அரங்கில் (TEFLAS) ‘100 பூக்கள்’ என்ற மாணவர் மன்றத்தின் சார்பில் ‘ஜானே பி தோ யாரோ’ என்ற திரைப்படம் ஒன்றும் திரையிடப்படுவதாக இருந்துள்ளது. அப்போதுதான், அங்கு வந்த ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏபிவிபி-யைச் சேர்ந்த கும்பல், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூரத்  தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன், மாண வர் செயற்பாட்டு அரங்கத்தில் இருந்த காரல் மார்க்ஸ், லெனின், பெரியார் உள்ளிட்ட தலைவர்களையும் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். ஏபிவிபி குண்டர்களின் இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15-க்கும் அதிகமான மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறிப்பாக, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மருத்துவப் பாடத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தூத்துக்குடி யைச் சேர்ந்த நாசர் முகம்மது மொய்தீன், கன மான பொருளால் தாக்கப்பட்டு தலையில்  படுகாயம் அடைந்துள்ளார். சக மாண வர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஏபிவிபி கும்பலானது ஆம்புலன்சை யும் மறித்து அராஜகம் செய்துள்ளது. பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்குள் புகுந்தும் அநாகரிகமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக, இந்திய மாணவர் சங்கத்தினர் திரண்டனர். அதன்பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. படுகாயம் அடைந்த தமிழ்நாட்டு மாணவர் நாசர் முகம்மது மொய்தீன், சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, திங்கட்கிழமை காலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் மன்றத்தில் (TEFLAS) மார்க்ஸ், லெனின், பெரியார் போன்ற தலைவர்களின் படங்கள் மட்டுமே உள்ளதாகவும், அங்கு சத்ரபதி சிவாஜியின் படத்தை வைப்பதற்கு முயன்றபோது, இடதுசாரி மாணவர்கள்தான் எங்களைத் தடுத்து தாக்குதல் நடத்தினர் என்று ஏபிவிபி பழிபோட்டுள்ளது. கடந்த ஆண்டு மகா ராணா பிரதாப் சிங்-கின் உருவப்படத்தை வைக்க முயன்றபோதும், இடதுசாரி மாண வர்கள் தங்களைத் தாக்கியதாக ஏபிவிபி செய்தித் தொடர்பாளரான ஆதர்ஷ் ஜா கூப்பாடு போட்டுள்ளார்.