states

‘நியூஸ் கிளிக்’ அலுவலகத்திற்கு சீல்

பத்திரிகையாளர்களின் வீடு, அலுவலகங்களுக்குள் புகுந்து தில்லி போலீஸ் அராஜகம்

நியூஸ் க்ளிக் உள்ளிட்ட ஊடகங்கள் மீதான ஒன்றிய பாஜக அரசு தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
தில்லி காவல்துறை செவ்வாயன்று காலை பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், ஊடகங்கள், விகட கவிகள், அரசியல் நையாண்டி எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், கலாச்சார வரலாற்றியலாளர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் புகுந்து சோதனை நடத்தியுள்ளது. உபா எனப்படும் கொடிய ஆள்தூக்கி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. 

ஊடகங்களின் மீதும் கருத்துச் சுதந்திரம் எனும் அடிப்படை உரிமையின் மீதும் நடத்தப்பட்டுள்ள கடுமையான தாக்குதல் ஆகும். கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசு பல்வேறு ஊடகங்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்கும் முடக்குவதற்கும் தனது விசாரணை அமைப்புகளை ஏவியுள்ளது. குறிப்பாக பிபிசி, நியூஸ் லாண்டரி, டைனிக் ஜாக்ரன், பாரத் சமாச்சார், காஷ்மீர் வாலா, தி வயர் போன்ற ஊடகங்கள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. தற்போது நியூஸ் க்ளிக் ஊடகமும் இத்தகைய கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

அதிகாரத்திற்கு எதிராக உண்மையை உறைக்கும் ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான இத்தகைய பெருமளவிலான எதேச்சதிகார தாக்குதலை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

புதுதில்லி, அக். 3 - மோடி அரசின் ஊழல் மோசடிகள், இந்துத்துவா வெறுப்பு அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் ‘நியூஸ் கிளிக்’ இணைதள செய்தி நிறுவனத்தின் தில்லி அலுவலகத்திற்கு சீல் வைத்து, மோடி அரசு எதேச்சதி காரத்தை அரங்கேற்றியுள்ளது. ‘நியூஸ் கிளிக்’ மீது, சட்டவிரோத நட வடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப் படும் ‘உபா’ (UAPA) சட்டத்தின் கீழ்  புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ள தில்லி காவல்துறை சிறப்பு பிரிவு, நியூஸ் கிளிக் ஊடகத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட 35  இடங்களில் சோதனையும் நடத்தி யுள்ளது. ‘நியூஸ் கிளிக்’ இணையதளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான பிரபீர் புர்காயஸ்தாவை கைது செய்தது டன் பத்திரிகையாளர்கள் ஊர்மிலேஷ், அவுனிந்த்யோ சக்கரவர்த்தி, அபிசார் ஷர்மா, பரஞ்சோய் குஹா தாகுர்தா  மற்றும் வரலாற்றாசிரியர் சோஹைல் ஹாஷ்மி ஆகியோரை பல மணிநேரம் விசாரணைக்கும் உட்படுத்தியுள்ளனர். இந்த 6 பேரின் வெளிநாட்டுப் பய ணங்கள், குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக தில்லி ஷாஹீன் பாக்கில் நடந்த போராட்டம் மற்றும்  தில்லி விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் போது நியூஸ் கிளிக் வெளியிட்ட செய்தி கள் தொடர்பாக 25 கேள்விகளை எழுப்பி பதிலளிக்குமாறும் காவல்து றை நெருக்கடி கொடுத்துள்ளது. ஒன்றிய பாஜக அரசானது, தங்களை விமர்சிக்கும் அச்சு மற்றும் இணையதள ஊடகங்களை மிரட்டும் விதமாக, வருமான வரித்துறை, அம லாக்கத்துறை, சிபிஐ, தேசிய புல னாய்வு முகமை ஆகியவற்றை ஏவி  சோதனை நடத்துவதை வாடிக்கை யான ஆயுதமாக வைத்துள்ளது. ஏற்கெனவே ‘தைனிக் பாஸ்கர்’, ‘பாரத் சமாச்சார்’, ‘நியூஸ் லாண்டரி’, ‘தி குயிண்ட்’, ‘கிரேட்டர் காஷ்மீர்’, ‘என்.டி.டி.வி.’, ‘தி வயர்’ உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மீது மோடி அரசு ரெய்டு நடத்தியது. இந்த ஆண்டு சர்வ தேச செய்தி ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி நிறுவனம் மீதும், குஜராத் கல வரம் குறித்த ஆவணப்படத்தை வெளி யிட்டதற்காக வருமான வரித்துறை யை ஏவி 3 நாட்களாக சோதனை நடத்தியது.

இந்தப் பின்னணியிலேயே இணை யதள செய்தி நிறுவனமான ‘நியூஸ் கிளிக்’ மீதும், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டி, 2021 செப்டம்பர் மாதத்தில் அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய அரசு சோதனை நடத்தியது. ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்துக்குச் சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று அமெரிக்க ஊடகமான ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ பொய்ச் செய்தி வெளி யிட்டது. சீனாவில் தொழில் நடத்தும் அமெரிக்காவைச் சேர்ந்த நெவில் சிங்கத்துக்கும் ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்திற்கும் தொடர்பிருப்பதாகவும் நியூயார்க் டைம்ஸ் பரப்பி வந்தது.  அதனடிப்படையிலேயே 2021-இல் சோதனை நடத்தியதாக தெரிவித்த ஒன்றிய பாஜக அரசு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் பிர பீர் புர்காயஸ்தாவுக்குச் சொந்தமான ரூ. 4.5 கோடி மதிப்பிலான வீட்டையும் ரூ. 41 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை யையும் அமலாக்கத்துறை மூலம் முடக்கியது.  2018 முதல் 2021 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட  நாடுகளில் உள்ள நிறுவனங்களிட மிருந்து ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்து க்கு ரூ. 86 கோடி நிதியுதவி வந்திருப்ப தாகவும் தெரிவித்தது. இதற்கு அப்போதே ‘நியூஸ்  கிளிக்’கின் ஆசிரியர் பிரபீர் புர்கா யஸ்தா மறுப்பு தெரிவித்தார். “ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கை, செய்தி இணையதளத்திற்கு எதிரான  ஒடுக்குமுறை. பல்வேறு ஏஜென்சி களின் இந்த விசாரணைகள், எங்கள் நிறு வனம் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டு கள், ‘நியூஸ் கிளிக் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் பத்திரிக்கை சுதந்தி ரத்தை முடக்கும் முயற்சி. இந்திய அர சியலமைப்பு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் நடவடிக்கை” எனக் குறிப்பிட்டார். எனினும், ‘நியூஸ் கிளிக்’ இணை தளம் நிறுவனத்தை, தில்லி காவல்துறை மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED), பொருளாதார குற்றப்பிரிவு (EOW) ஆகியவற்றின் கண் காணிப்பின் கீழ் கொண்டு வந்தது.

இந்நிலையிலேயே, செவ்வாயன்று ‘நியூஸ் கிளிக்’ ஊடகம் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப்படும் ‘உபா’ (UAPA) சட்டத்தின் கீழ் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்த, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, ‘நியூஸ் கிளிக்’ ஆசிரி யர் மற்றும் இந்த ஊடகத்தோடு தொடர்புடைய கடந்த கால மற்றும் தற்போதைய செய்தியாளர்கள், பங்க ளிப்பாளர்கள் மற்றும் பணியாளர் களின் வீடுகள் என 35 இடங்களில் அராஜ கமான முறையில் சோதனை நடத்தி யுள்ளது. ‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் பிரபீர்  புர்காயஸ்தா, வீடியோ பத்திரிகை யாளர் அபிசார் சர்மா, அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளரு மான அவுனிந்த்யோ சக்ரவர்த்தி, மூத்த பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா தாகுர்தா, பாஷா சிங், பாபா சின்ஹா மற்றும் ஊர்மிலேஷ் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை அதி காலை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வர்களில் அரசியல் நையாண்டி மற்றும் ஸ்டாண்ட்-அப் காமிக் சஞ்சய் ரஜௌரா மற்றும் வரலாற்றாசிரியர் சோஹைல் ஹாஸ்மி ஆகியோர் அடங்குவர்.  மும்பையில் சமூக செயற்பாட்டா ளர் டீஸ்டா செதல்வாட் வீட்டிலும் சோத னை நடத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டிடி யூட் பார் சோஷியல் ரிசர்ச் என்ற சிந்த னைக் குழுவின் இயக்குநரான செதல்வாட், நியூஸ் கிளிக்-க்கில் கட்டு ரைகள் எழுதியவர் என்ற நிலையில், அவரும் குறிவைக்கப்பட்டு உள்ளார். இவர்களில் தகுர்தா, ஊர்மிலேஷ் உள்ளிட்ட சில பத்திரிகையாளர்களை, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரி வானது, விசாரணைக்காக தங்களின் அலுவலகத்திற்கும் அழைத்துச் சென்றுள்ளது. “நாங்கள் காலை 10 மணி முதல் இங்கு (தில்லியில் உள்ள காவல்துறை சிறப்புப் பிரிவு அலுவலகத்திற்கு வெளியே) இருந்தோம். இருப்பினும், எங்களால் அவர்களை (ஊர்மிலேஷ் உள்ளிட்டோரை) சந்திக்க முடிய வில்லை, எங்களுக்கு எந்த ஆவணங் களும் வழங்கப்படவில்லை, எப்ஐ ஆரின் நகலும் எங்களுக்கு வழங்கப்பட வில்லை” என்று ‘நியூஸ் கிளிக்’ பத்திரிகையாளரான ஊர்மிலேஷின் வழக்கறிஞர் கவுரவ் யாதவ் பிடிஐ-க்கு பேட்டி அளித்துள்ளார். சோதனையின் போது, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரி வானது, மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட மின் னணு ஆதாரங்களைக் கைப்பற்றி இருப்பதையும், ஹார்ட் டிஸ்க்கு களின் தரவு டம்ப்களை எடுத்துச் சென்றதையும் பெயர் குறிப்பிடாத காவல்துறை அதிகாரி ஒருவர் உறு திப்படுத்தினார். மேலும், விசார ணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வர்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், விசார ணைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வரலாற்று ஆசிரியர் சோஹைல் ஹாஸ்மியின் மகள் சாரா ஹஷ்மி அளித்துள்ள பேட்டி ஒன்றில், செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ஆறு அதிகாரிகள் எங்களது புது தில்லி இல்லத்தை அடைந்து 1.5 மணி  நேரத்திற்கும் மேலாக தேடுதல் நடத்தி னர். “ஆரம்பத்தில், அவர்கள் எங்கள் வீட்டிற்குள் தேடுதல் ஆணையை காட்டாமல், ‘நியூஸ் கிளிக்’கோடு தொட ர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே சொன்னா ர்கள். மீண்டும் அவர்களிடம் கேட்ட தற்கு, என் தந்தைக்கான (சோஹைல் ஹாஸ்மி) பிடியாணையை எங்களிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் என் தந்தை யிடம், என்ன செய்கிறீர்கள், யாருட னெல்லாம் தொடர்பு உள்ளது என்று  கேட்டனர். எனது தந்தையின் லேப்டாப்,  போன், ஹார்டு டிஸ்க் மற்றும் பென் டிரைவ்களை பறிமுதல் செய்தனர்” என்று உறுதிப்படுத்தினார். மேலும், “இந்த சோதனைகள் அப்பட்டமான மிரட்டல் அன்றி வேறல்ல” என்ற சாரா ஹாஸ்மி, “இது  அரசாங்கத்திற்கு எதிராக பேசு வோரின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என்றார்.

“தேடல் வாரண்டில் உபா சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் 153ஏ  பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் எதற்காக சோதனை என தெரிவிக்க வில்லை. விவசாயிகள் போராட்டம், தில்லி கலவரம் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நான் செய்த வேலை குறித்து அவர்கள் (போலீசார்) என்னிடம் கேள்வி எழுப்பி னர்” என்று நியூஸ் கிளிக் பத்திரிகை யாளர் ஒருவரும் பேட்டிஅளித்துள்ளார். “பத்திரிகையாளர்கள் என்ற வகையில், பல பிரச்சனைகள் குறித்து அறிக்கையிடுவதும் எழுதுவதும் எங்களது பணியாகும். அதற்காக அவர்கள் எங்களைப் போன்றவர்களை குறிவைத்தால் அது நியாயமற்றது. இது ஊடகங்களை கையாளும் சரி யான நடைமுறை அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “சில அரசியல் நடிகர்கள் மற்றும் ஊடகங்களின் பிரிவுகளால் எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மை யில் அல்லது சட்டத்தின் அடிப்படை யற்றவை. நியூஸ் கிளிக் ஒரு சுதந்திர மான செய்தி நிறுவனம், மேலும் நாங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழ லாக அல்லது பிறரின் ஊதுகுழலாக செயல்படுகிறோம் என்பது பொய். மேலும், இவை புதிய குற்றச்சாட்டுகள் அல்ல. கடந்த காலத்திலும் கூறப்பட்ட வை. இந்த விவகாரம் சப் ஜுடிஸ் என்ப தால் உரிய மன்றத்தில் அதாவது நீதி மன்றத்தில் பதிலளிப்போம்” என்று நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்கா யஸ்தா” பதிலளித்துள்ளார். சோதனையின் முடிவில், தில்லி சாகேட்டில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ அலு வலகத்தை பூட்டியும், மோடி அரசு எதேச்சதிகார நடவடிக்கையில் இறங்கி யிருக்கும் நிலையில், மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழு வதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்களின் தேசிய கூட்டமைப்பு, தில்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மற்றும் கேரளா யூனியன் ஆப் ஒர்க்கிங் உள்ளிட்ட அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள் ளன. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.