states

img

அம்பானி, அதானியால் என் சகோதரனை விலைக்கு வாங்க முடியாது!

லோனி, ஜன. 4 - “அம்பானியும், அதானியும் இந்த தேசத்தில் தலைவர்களை, ஊடகங் களை விலைக்கு வாங்கியிருக்கலாம்; ஆனால், அவர்களால் என் சகோத ரனை விலைக்கு வாங்க முடியாது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை, செவ்வாயன்று உ.பி. மாநி லத்திற்குள் நுழைந்த நிலையில், இந்த யாத்திரையை லோனி நகரில் பிரியங்கா காந்தி வரவேற்றார். அப்போது இதுதொடர்பாக பிரியங்கா காந்தி பேசியிருப்பதாவது: “எனது சகோதரர் ஒரு போராளி. நான் அவரை நினைத்துப் பெரு மைப்படுகிறேன். இதுவரை அவர் 3000 கி.மீ. யாத்திரை மேற்கொ ண்டிருக்கிறார். அம்பானியும், அதானியும் இந்தியத் தலைவர்களை விலைக்கு வாங்கியிருக்கலாம். பொதுத்துறை நிறுவனங்களையும் ஊட கங்களையும் விலைக்கு வாங்கி யிருக்கலாம். ஆனால் அவர்களால் என் சகோதரரை விலைக்கு வாங்க  முடியவில்லை. அவ்வாறு வாங்கவும் முடியாது. வெறுப்பு அரசியலும், பிரிவினை அரசியலும் நீடித்தால் மக்கள் பிரச்சனை தீராது. வேலைவாய்ப்பின்மை பிரச்சனை தீராது. நாட்டின் பொருளாதாரம் முன்னேறாது. என் சகோதரரின் மாண்பை சிதைக்க இந்த அரசாங்கம் கோடி கோடி யாக செலவழித்தது.

ஆனால் அவர் களால் அதைச் செய்ய முடியவில்லை. எனது சகோதரர் உண்மையின் பாதையில் நடக்கிறார். ராகுல் காந்தி தன்னுடைய வழியில் இருந்து பின்வாங்கவே இல்லை. ஏராளமான நிறுவனங்கள் ராகுல் காந்தியை குறிவைத்தன. ஆனால், அவர் அதைப் பார்த்து அஞ்சவே இல்லை. அவர் ஒரு போர் வீரன். ராகுல் காந்தி வெறுப்பை பரப்பும் சந்தையில், அன்பை பரப்பும் ஒரு கடையை திறக்க வருகிறார். அன்பை பரப்பும் அந்த கடைகளின் கிளைகளை உத்தரப்பிரதேசத்தில் நீங்கள் தொடங்க வேண்டும் என மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.”  இவ்வாறு பிரியங்கா காந்தி பேசியுள்ளார். ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கும் பதிலளித்திருக் கும் பிரியங்கா காந்தி, “வட இந்தியா வில் நிலவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ராகுல் காந்தியை ஜாக்கெட்டை (குளிர் தாங்கும் ஆடை) அணியச் செய்யுங்கள் என்று மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். உங்கள் சகோதரனின் உயிர் குறித்து உங்களுக்கு பயம் இல்லையா? என்று என்னிடம் மக்கள் கேட்கிறார்கள்.  ஆனால், சத்தியக் கவசத்தால் என் சகோதரன் பாதுகாக்கப்படுகிறான். கடவுள் அவனை காப்பார், எதுவும்  நடக்காது” என்பதே நான்  அவர் களுக்கு அளிக்கும் பதிலாகும் என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.