states

img

5 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்

சென்னை, அக். 30 - போக்குவரத்துக் கழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை மீண்டும்  இயக்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு வலியுறுத்தி உள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்யக்கூடாது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், போக்குவரத்து கழகங் களை சீர்குலைக்கும் அதிமுக ஆட்சி யில் போடப்பட்ட 8 அரசாணை களை ரத்து செய்ய வேண்டும். 8 ஆண்டுகளாக ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அக விலைப்படி உயர்வு மற்றும் ஒப்பந்த பலன்களை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை யைத் தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் திங்களன்று (அக்.30) பல்லவன் இல்லம் முன்பு பெருந்திரள் அமர்வு  போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளருமான கே.ஆறுமுக நயினார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கூட்ட மைப்புத் தலைவர்கள் பேசினர். அப்போது செய்தியாளர்களிடம் கே.ஆறுமுகநயினார் கூறிய தாவது:

2018ஆம் ஆண்டு போக்கு வரத்துக் கழகங்களில் 22 ஆயிரம் பேருந்துகள் இயங்கின. அப்போது பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட 8 அரசாணை களை அதிமுக அரசு வெளி யிட்டது. அதன்பேரில் உடனடியாக 1500 பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தற்போது 18 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதிலும் கூட ஊழியர் பற்றாக்குறையால் ஆயிரம் பேருந்துகள் இயங்கா மல் உள்ளன. இதனால் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். போக்கு வரத்துக் கழகங்களும் சீர்குலைக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட  அரசாணைகளை ரத்து செய்யா மல், பேருந்துகளின் எண்ணிக்கை யை திமுக அரசு குறைப்பதை கண்டிக்கிறோம். அதிமுக ஆட்சி யில் போடப்பட்ட 8 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். 20 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பி, பழைய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும். காலிப்பணியிடங்களை ஒப்பந்த முறையில் சட்டவிரோதமாக நிரப்புவதை ஏற்க முடியாது. 90ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்று கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது போக்கு வரத்து துறை அமைச்சர் தெரி வித்தார். அதனை அரசு நிறை வேற்ற வேண்டும். 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து போக்கு வரத்து துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி ஆகியோரை கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து பேசினர்.