“மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடை யும் நிலையில், இனி தீவிர அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று முன் னாள் ஒன்றிய அமைச்ச ரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார். ஏ.கே. அந்தோணி 1977, 1995, 2001 என மூன்று முறை கேரள முதல்வராக பதவி வகித்துள் ளார். 5 முறை எம்.பி.யாகவும் தேர்ந்தெ டுக்கப்பட்டு, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முக்கியமான ஒன்றிய அரசுத் துறை களுக்கு அமைச்சராக இருந்துள்ளார். ‘‘ எனக்கு தற்போது 81 வயதாகிறது. உடல் நிலையும் சரியில்லை. கட்சியில் இளை ஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று அந்தோணி தெரிவித்துள்ளார்.