states

img

தொலைத்தொடர்பு துறையிலும் நுழைகிறார் அதானி

புதுதில்லி, ஜூலை 9-  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவ னங்களுக்கு போட்டியாக அதானி குழு மமும் தொலைத்தொடர்பு வர்த்த கத்தில் நுழைவதாக செய்திகள் வெளி யாகி, கார்ப்பரேட் வட்டாரத்தை பர பரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. செல்போன் அலைக்கற்றை மற்றும் 5ஜி சேவைகளுக்கு உரிமம் பெறுவதற்கான ஏலம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த  நிலையில், கடைசி நாள் வரை மொத்தம் 4 நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளன. இந்த நிறுவனங்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக ஜூலை 12-ஆம் தேதிதான் அறிவிக்கப்பட உள்ளன என்றாலும், முகேஷ் அம்பானியின் ஜியோ, சுனில் பாரதி மிட்டலின் ‘ஏர்  டெல்’ மற்றும் வோடபோன் - ஐடியா  ஆகிய 3 நிறுவனங்கள் விண்ணப்பங்  களை அளித்திருப்பது வெளிப்படை யாக தெரியவந்துள்ளது. நான்காவது நிறுவனம் டெலிகாம் துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உரிமம் பெற்ற நிறுவனம் என்பது மட்டுமே தெரியவந்துள்ளது.  இந்நிலையில், அந்த நான்காவது நிறுவனம், அதானி குழுமமாகவே இருக்க முடியும் என்று தொலைத் தொடர்புத்துறை சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தொலைத்தொடர்புத் துறையில் ஈடுபடாவிட்டாலும் டெலிகாம் சேவை வழங்குவதற்கான ‘நேஷனல் லாங்  டிஸ்டன்ஸ் (NLD) மற்றும் இண்டர்நேஷ னல் லாங் டிஸ்டன்ஸ் (ILD) சேவைக் கான உரிமத்தை அதானி ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தார். தற்போது நேரம் பார்த்து அந்த உரிமம் மூலம் அலைக்கற்றை ஏலத்தில் அதிரடியாக அதானி நுழைந்துள்ளார் என்று அவர் கள் கூறுகின்றனர். 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்  மதிப்புள்ள 72 ஆயிரத்து 97 அலைக்கற்  றைகள் ஜூலை 26-ஆம் தேதி ஏலம்  விடப்பட உள்ளன. இந்த அலைக் கற்றைகள் 600 மெகா ஹெட்ஸ் (MHz) முதல் 2300 மெகா ஹெட்ஸ்  (MHz) வரையிலான அலை வரிசையில் வழங்கப்பட இருக்கின்றன. இவற்றிற்  கான உரிமம் அடுத்த 20 ஆண்டு களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அம்பானியின் ‘ஜியோ’ வருகையால் 10-க்கும் அதிக மான டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கெ னவே மூடப்பட்ட நிலையில் அதானி  வருகையால் மீதமுள்ள ‘ஏர்டெல்’,  ‘வோடபோன் ஐடியா’ நிறுவனங்க ளுக்கும் மூடுவிழா காணப்படலாம் என்று டெலிகாம் சந்தை வல்லுநர்கள் இப்போதே எச்சரிக்கை செய்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதானி குழுமம் பங்கேற்க இருப்பது ஏர்டெல், வோடாபோன்- ஐடியா நிறுவ னங்களுக்கு மட்டுமன்றி, ரிலையன் ஸின் ஜியோவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.