states

img

தில்லி, நொய்டா பகுதியின் காற்று தரக் குறியீடு 400-ஆக அதிகரிக்குமாம்!

நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லி யில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் வெகுவாக குறைந்து வரும் நிலை யில், கடந்த 2 நாட்களாக வடக்கு தில்லி, துவராகா, ஷாலிமார் பாக் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு (AQI) மிகமோசமான அளவில் 300 புள்ளிகளை கடந்தது.  தில்லியின் பெரும்பாலான பகுதிகள்,  உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக  வகைப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை மற்றும் குளிர்காலம் நெருங்கி வருவதால் வரும் காலங்களில் காற்று தரக் குறியீடு 400ஐ தாண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுத் துறை (பிசிடி) வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் இந்த எச்சரிக்கையால் தில்லி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.