தில்லியில் உள்ள ஆதிவாசி ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் மற்றும் “ரமணிகா அறக்கட்டளை” இணைந்து ஆண்டுதோறும் “ரமணிகா குப்தா சம்மான்” விருது வழங்கி வருகின்றன. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா மேற்குவங்கம் மாநிலம் பங்குராவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சந்தாலி எழுத்தாளரும், பிரபல இலக்கியவாதியான ஸ்ரீ ஜோதிலால் ஹன்ஸ்தாவுக்கு 2023ஆம் ஆண்டிற்கான “ரமணிகா குப்தா சம்மான்” விருது வழங்கப்பட்டது.