மேற்குவங்க மாநி லம் மால்டா மாவட் டத்தில் உள்ளது ஆதினா மசூதி. இந்திய தொல்லியல் துறையின் (ASI) அதிகார வரம்பில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆதினா மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப் பட்டது எனக் கூறி சாமியார் மகராஜ் ஹிரண்மாய் கோஸ்வாமி தலைமையி லான இந்துத்துவா கும்பல், மசூதி நிர்வாகத்தின் எதி ர்ப்பை மீறி கடந்த ஞாயி றன்று மசூதி வளாகத்திற் குள் பூஜை நடத்தியது. இந்த விவகாரம் காட்டுத் தீ போல பரவ மால்டா மாவட் டத்தில் மட்டுமின்றி, மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் உருவான நிலையில், ஆதினா மசூதி முன்பு முஸ்லிம் மக்கள், மதச்சார்பற்ற ஆதரவாளர் கள் என அனைத்து தரப்பி னரும் குவிந்தனர். தகவலறிந்த போலீசார் பூஜை செய்த சாமியார் மக ராஜ் கோஸ்வாமி மற்றும் அவருடன் இருந்த ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் மீது எப்ஐஆர் பதிவு செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்த பின்பு, மால்டா மாவட்டத்தில் பதற் றம் தணிந்தது. சாமியார் மகராஜ் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அல்ல ஆதினா மசூதியில் பூஜை செய்த சாமியார் மக ராஜ் கோஸ்வாமி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜகவின் உத்தரவின் பேரிலேயே அவர் ஆதினா மசூதியில் பூஜை செய்துள்ளதாகவும், உத்தரப்பிரதேச மாநி லத்தின் அயோத்தி பாபர் மசூதி விவகாரம் போல மேற்கு வங்கத்திலும் மத வன்முறையை கிளப்ப ஆர்எஸ்எஸ் - பாஜக சாமி யார் மகராஜ் கோஸ்வாமி யை களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.