states

img

ஒரே நாளில் உலகின் 6-ஆவது பெரும்பணக்காரர் ஆனார் அதானி!

புதுதில்லி, ஏப்.13- இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடு களான சென்செக்ஸ், நிப்டி ஆகியவை, வர்த்தக வாரத்தின் துவக்க நாளான திங்க ளன்று கடும் சரிவைச் சந்தித்தது. மூன்று நாட்களாகவே சரிவைக் கண்டு வரு கின்றன. ஆனால், பிரதமர் மோடியின் நெருங் கிய நண்பரான கவுதம் அதானிக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்கு கள் விலை மட்டும் கிடுகிடுவென உயர்ந்து, அவரை ஒரேநாளில் அவரை இந்தியா வின் முதற்பெரும் பணக்காரராக மட்டு மன்றி, உலகின் 6-ஆவது பெரும்பணக்கா ரராக மாற்றியுள்ளது. ‘போர்ப்ஸ் ரியல் டைம் பில்லிய னர்ஸ் இன்டெக்ஸ்’ (Forbes Real Time Billionaires Index)-ஸின்படி, உலகப் பெரும்பணக்காரர்களின் பட்டியலில் சாப்ட்வேர் தொழிலதிபர் லாரி எலிசனைப் பின்னுக்குத் தள்ளி, கவுதம் அதானி 6-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.  கடந்த திங்கட்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 900 கோடி டாலர்- சுமார் ரூ. 68 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது. இதன்காரண மாக, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு, தற்போது ‘கூகுள்’ நிறுவனத்தை சேர்ந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகி யோரை விட அதிகரித்து உள்ளது.  செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ. 9 லட்சத்து 27 ஆயிரம் கோடியாகும். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலை வரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பைவிட ரூ. 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி அதிகமாகும். அதானியின் அசுர வளர்ச்சிக்கு, அவரது ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனத்தின் பங்குகள் விலை 20 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்தது முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.