states

img

விலைபேசப்படும் ஓடாத ரைஸ் மில்கள் அரிசி விற்பனையிலும் இறங்குகிறார் அதானி!

கொல்கத்தா, மார்ச் 26- இந்தியாவின் மிகப் பெரிய அன்றாட பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு (Fast -Moving Consumer Goods - FMCG) நிறுவனங்களில் ஒன்றாக ‘அதானி வில்மர்’ (Adani Wilmar Limited) உள்ளது. இது புதிதாகச் சமையல் எண்ணெய் உட்படப் பல பொருட் களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மக்கள் தினசரி பயன்படுத்தும் உண வுப் பொருட்கள் பிரிவிலும் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள் ளது. அதாவது ஏப்ரல் முதல் அரிசி விற்பனையிலும் இறங்கு வதாக அறிவித்துள்ளது. ‘அதானி வில்மர்’ நிறுவனம் தனது அரிசி விற்பனையின் துவக் கமே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா  முழுவதிலும் உள்ள மாநில அளவிலான அரிசி பிராண்டுகளை யும், ரைஸ் மில்களையும் கைப்பற்றுவதற்கான முயற்சியில் தற்போது தீவிரமாகியுள்ளது. ஏப்ரல் மாதம் மேற்குவங்கத்தில் இருந்து தனது புதிய அரிசி  பிராண்டை அறிமுகம் செய்து விற்பனையைத் துவங்கும் ‘அதானி வில்மர்’, இதற்காக மேற்கு வங்கத்தில் திவாலான, இயங்க முடி யாத சில ரைஸ் மில்களைக் கைப்பற்றியுள்ளது.  

மேற்கு வங்கத்தில், பொது விநியோக உணவு தானியங்களைத் தாண்டி தினசரி மக்கள் பயன்படுத்தும் அரிசி ஆண்டுக்கு 30 முதல் 35 மில்லியன் டன்களாக உள்ளது. அந்த வகையில், “இந்த வேக மாக வளரும் பிரிவில் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கு வங்கத்தில் சில ரைஸ் மில்களைக் கைப்பற்றி வர்த்தகத்தைத் துவங்க உள்ளோம்” என ‘அதானி வில்மர்’ நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் ஆங்ஷு மல்லிக் கூறியுள்ளார்.  ‘அதானி வில்மர்’ ஏற்கெனவே பாசுமதி அரிசிப் பிரிவில் வர்த்த கம் செய்து வருகிறது. ஆனால், இது மொத்த அரிசி நுகர்வில் 10 சத விகிதம் மட்டுமே. எனவே தினசரி நுகர்வுக்குப் பயன்படுத்தப்படும் பிராந்திய வகை அரிசியை விற்பனை செய்ய, புதிய பிராண்டை தனது பார்சூன் பிரிவின் கீழ் அறிமுகம் செய்ய உள்ளது.