states

img

மோடி அரசுக்கு உணவு கொடுக்காதீர்கள் விவசாயிகளுக்கு திரைக்கலைஞர் கிஷோர் வேண்டுகோள்

தில்லியில் நடைபெறும் விவசாயி கள் போராட்டத்திற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் உட்பட பல் வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், தென்னிந்திய திரை யுலகின் பிரபல நட்சத்திர நடிகரான  கிஷோர், மோடி அரசுக்கு சாட்டையடி  கொடுத்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் அவர் கூறுகையில், “குறைந்த பட்ச, அதிகபட்ச ஆதார விலை உறுதி யளித்து ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தன மான அரசியல்வாதிகளும், விவசாயிகள்  விளைவித்த உணவைத்தின்று உயிரோடு  இருக்கும் ஊடகத்தினரும் அதே விவ சாயிகளை துரோகிகள் என்று முத்திரை  குத்துகின்றனர். இவர்களை எப்படி இந்தி யர்கள் என்று சொல்வது? சாலைகள்  தோண்டப்பட்டு சுவர்கள் கட்டப்பட்டது.  தோட்டாக்கள் வீசப்பட்டது. கண்ணீர்  புகைக் குண்டுகள் வீசப்பட்டது என அனைத்தையும் செய்தது மோடியின் அரசு. ஆனால் தேசவிரோத முத்திரை விவசாயிகளின் தலையில் உள்ளது. முழு  நாட்டிற்கும் உணவு வழங்கும் அன்ன தாதாக்களான விவசாயிகளுக்கு எதி ராக பொய்யான வதந்திகளைப் பரப்பும்  மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது  பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை  விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும்”  என அவர் பதிவிட்டுள்ளார்.