லக்னோ, பிப். 18 - கோஸ்வாமி துளசிதாஸ் எழுதிய ராம்சரித்மனாஸ் காவியம், தலித்துக் கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட இந்த நாட்டின் 90 சதவிகித பூர்வகுடி மக்களை இழிவு படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு மேலும் மேலும் வலுவடைந்து வரு கிறது. ‘ராம்சரித்மனாஸிற்கு’ தடை விதிக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் கடந்த ஜனவரி 11 அன்று நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, ‘‘ராமாயண காவி யத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ராம்சரித்மனாஸ்’ கவிதை சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது. ‘ராம்சரித்ம னாஸின்’ சில பகுதிகள் மீண்டும் குறிப்பிட்ட சாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது. தலித்துக்களுக்கு கல்வி வழங்கக் கூடாது. ஏனென்றால் கல்வி யைப் பெற்ற பின் தலித்துக்களும், பழங்குடிகளும் பாம்புகளைப் போல ஆபத்தானவர்களாக மாறுவார்கள் என்று ‘மனுஸ்மிருதி’ போன்று ‘ராம் சரித்மனாஸூம்’ கூறுகிறது. சமூ கத்தைப் பிளவுபடுத்துகிறது. மனுஸ் மிருதி, ராம்சரித்மனாஸ் ஆகியவை காவி சித்தாந்தவாதியான கோல்வால் கரின் ‘சிந்தனைக் கொத்து’ போன்று வெறுப்பைப் பரப்புவனவாக உள்ளன.
எனவே, புனிதமான இந்து மத நூல்களாக கருதப்படும் மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் போன்றவை தலித்துக்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் கல்வி கற்பதற்கு எதிராக உள்ளன” என்று அமைச்சர் சந்திரசேகர் குற்றம் சாட்டினார். “வெறுப்பு அல்ல, அன்பே நாட்டை ஒன்றிணைக்கிறது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இது சங்-பரிவாரங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே, பீகார் மாநில வருவாய்த் துறை அமைச்சர் அலோக் மேத்தா அடுத்த தாக்குதலைத் தொடுத்தார். பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட் டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அலோக் மேத்தா, “கோவில்களில் மணி அடிக்கும் மக்கள், தற்போது சக்திவாய்ந்த பதவி களை வகிக்கின்றனர். உதாரணத்திற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எடுத்துக் கொள் ளுங்கள்” என்று கூறினார். அத்து டன், ‘‘நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர், பிரிட்டிஷ் அரசின் ஏஜெண்டுகளாக இருந்தவர்கள். அவர்கள் தற்போது பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்க ளை உள்ளடக்கிய மீதமுள்ள 90 சதவிகிதத்தினர் மீது தங்கள் சுரண்ட லை நடத்துகிறார்கள்.
முன்னாள் பீகார் துணை முதல்வர் ஜகதேவ் பாபு பிரதிநிதித்துவப்படுத்திய தொண்ணூறு சதவிகித மக்கள், முதலில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தா லும், பின்னர் அவர்களின் ஏஜெண்டு களாலும் (பிராமணர்கள் உள்ளிட்ட உயர் சாதியினரால்)சுரண்டப்பட்டனர். அந்த சுரண்டல்காரர்களை ஜகதேவ் பாபு 10 சதவிகிதத்தினர் என்று அழைத்தார். ஜக்தேவ் பாபு பேசிய 10 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்து கிறார்கள். அது இன்றுவரை தொடர்கிறது’’ என்று காட்டமாகக் கூறினார். இந்நிலையில்தான், ராம்சரித்ம னாஸ் அண்மையில் உ.பி.யிலும் எதிர்ப்புக்கு உள்ளானது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செய லாளர் சுவாமி பிரசாத் மவுரியா அண்மையில் பேசும்போது, ‘‘இராமா யணத்தை அடிப்படையாகக் கொண்ட ராம்சரித்மனாஸ் நூலில் தலித்துகள் மற்றும் பெண்கள் இழிவுபடுத்தப் பட்டுள்ளனர். அதை நீக்க வேண்டும்” என்று குரல் கொடுத்தார்.
“சாதி அமைப்பு பிராமணர்களால் உருவாக்கப்பட்டது என்று ஆர்எஸ்எ ஸ் தலைவர் பகவத் கூறியுள்ளார். மதத்தின் ஒப்பந்தக்காரர்கள் (பிராம ணர்கள்) என்று அழைக்கப்படு பவர்களையும், பெண்கள், பழங்குடி யினர், தலித்துகள் மற்றும் பிற்படுத் தப்பட்டவர்களையும், மதத்தின் போர்வையில் துஷ்பிரயோகம் செய்யும் மோசடிகளையும் மோகன் பகவத் அம்பலப்படுத்தியுள்ளார். அந்த வகையில், ராம்சரித்மனாஸில் உள்ள ஆட்சேபனைக்குரிய கருத்து களையும் அவர்கள் அகற்ற முன்வர வேண்டும்’’ என்று கூறினார். அந்த கருத்திற்கு மாநில எதிர்க்கட்சித் தலை வரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷூம் ஆதரவு தெரிவித்தார். இதற்கு, உத்தரப்பிரதேச இடை நிலைக் கல்வி அமைச்சர் குலாப் தேவி பதிலளித்துள்ளார். ‘‘ஸ்ரீ ராம்சரித்ம னாஸின் ஒரு பகுதியைத் தடை செய்ய வேண்டுமென சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா கூறி யுள்ளார். ஆனால் ராவணன் தனது இதயத்தில் ராமரை வைத்திருந்தார். அதனால் அவர் சொர்க்கத்திற்கு சென்றார். ஆனால் அதற்கு முன் அவரது நிலை என்ன? ‘ராமசரித்ம னாஸ்’ மனிதநேயத்தின் குணங்கள் நிறைந்த ஒரு வேதம். இது நமது நம்பிக் கையின் மீது எழுப்பப்பட்ட கேள்வி. இதை நம்பாதவர்களின் உள்ளத்தில் வெறுமை இருக்கிறது. அவர்கள் தாங்கள் அரசியலில் ஜொலிக்க மானஸை விமர்சிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.