பாட்னா, பிப். 8 - வாக்கு வங்கி அரசியலுக்காக, பிராமணர்களை இழிவுபடுத்தி பேசிய ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீகார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி யன்று நடைபெற்ற குரு ரவிதாஸ் ஜெயந்தி விழாவில் மோகன் பகவத் பேசுகையில், “சாதியமைப்பு கடவுளால் விதிக்கப்பட்டது அல்ல; அது பண்டிட்டு களால் உருவாக்கப்பட்டது” என்று தெரிவித்தார். ‘பண்டிட்டுகள்’ என்று பிராமணர் களைத்தான் மோகன் பகவத் குறிப்பிட்டுள் ளார் என்று சர்ச்சை எழுந்த நிலை யில், “’பண்டிட்டுகள்’ என்றால் அறிவு ஜீவிகள் என்றே பொருள்படும், அந்த அடிப்படையிலேயே பண்டிட்டுகள் என்றேன்.. பிராமணர்களை கூற வில்லை” என்று மோகன் பகவத் விளக்கம் அளித்தார். இந்நிலையில்தான் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்ப வர், முசாபர்பூர் சி.ஜே.எம். நீதிமன்றத் தில் மோகன் பகவத்துக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், “தலித் வகுப்பைச் சேர்ந்த துறவியும், மத மற்றும் சமூக சீா்திருத்த வாதியுமான ரவிதாசா் பிறந்த நாள் நிகழ்ச்சி, அண்மையில் மும்பையில் நடைபெற்றது.
இதில், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் கலந்து கொண்டு, மராத்தி மொழியில் உரை யாற்றியுள்ளாா். அவரது உரை பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. அந்த உரையில், ‘பண்டி ட்டுகள்தான் (கோயிலில் அர்ச்சகர் பணியாற்றும் பிரிவினர்) இந்து மதத்தில் நிலவும் கடுமையான சாதிய படிநிலைகளை உருவாக்கினாா்கள்’ என்று பேசியுள்ளாா். ஆா்எஸ்எஸ் தலை வரின் பேச்சு பிராமணா்களை அவ மதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவா் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, மத உணா்வுகளைப் புண்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மனு தொடர்பாக பேட்டி அளித்திருக்கும் வழக்கறிஞர் சுதிர் ஓஜா, “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மீது முசாபர்பூரில் உள்ள சிஜேஎம் நீதிமன்றத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 504, 505 மற்றும் 506 (அமைதியை கெடுக்கும் நோக்கில் அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் புகார் அளித்துள்ளேன். இந்த புகாரில் 153 மற்றும் 153ஏ பிரிவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 5-ஆம் தேதி மும்பையில் பிராமணர் கள்தான் சாதிகளை உருவாக்குவதாக குற்றம்சாட்டி மோகன் பகவத் பேசி யுள்ளார். வாக்கு வங்கி அரசியலைக் கருத்தில் கொண்டு சமூகத்தில் பிளவை உருவாக்கும் முயற்சியில் வேண்டு மென்றே இவ்வாறு பேசியுள்ளார். அவரது பொறுப்பற்ற அறிக்கை ஒட்டு மொத்த பிராமண சமூகத்தையும் இழிவுப்படுத்தியுள்ளது. மோகன் பகவத்தின் அறிக்கை நாடு முழுவதும் உள்ள பிராமணர் சமூகத்தின் கோபத்திற்கு வழிவகுத்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.