ஹசன், (கர்நாடகம்) அக்.16- கர்நாடகாவில் அரசுப் பேருந்துக்கும் லாரிக்கும் இடையே வேன் சிக்கிய விபத்தில் குழந்தைகள் உட் பட ஒன்பது பேர் பலியாகி னர். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தின் பனவாரா வை அடுத்துள்ள செலுவன ஹள்ளி என்ற இடத்தில் சனிக் கிழமை இரவு 11 மணி அள வில் 20-க்கும் மேற்பட்டவர் களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந் தது. அப்போது, அந்தச் சாலையில் வந்த அரசுப் பேருந்து மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்கு உள் ளானது. இந்த விபத்தில் வேன் போல் நசுங்கியது. இந்த இடிபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த லீலாவதி (50), சைத்ரா (33), சமர்த் (10), டிம்பி (12) தன்மெய் (10), துருவா ( 2), வந்தனா (20), டோட்டையா (60, மற்றும் பாரதி (50) ஆகி யோர் உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த வர்கள் தர்மஸ்தலா மற்றும் குக்கே சுப்ரமணியம் ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்துள் ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொது மக்கள் உதவியுடன் படு காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஹாசன் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். படுகாயமடைந்த பத்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.