புதுதில்லி, ஜன. 6 - தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலை நடக்க விடாமல், கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி, பாஜக, தான் நினைத்த தைச் சாதித்துக் கொண்டுள்ளது. அதே நேரம் பெரும்பான்மை இருந்தும் மேய ராக பதவியில் உட்கார முடியாமல் ஆம் ஆத்மி ஏமாற்றம் அடைந்துள்ளது. தில்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தேர்தல் நடை பெற்றது. 7-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. 15 ஆண்டு களுக்குப் பிறகு பாஜக தோல்வியைச் சந்தித்தது. 104 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தது. இதனால் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையைக் காட்டிலும் 8 இடங்கள் கூடுதலாக பெற்ற ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவியை கைப்பற்றும் சூழல் உருவானது. ஆம் ஆத்மியும் ஷெல்லி ஓபராயை மேயர் வேட்பாளராக அறிவித்தது. ஆனால், போதிய உறுப்பினர்கள் இல்லாவிட்டா லும், பாஜகவும் ஷாலிமர் பாக் என்பவ ரை மேயர் வேட்பாளராக அறிவித்து களத்தில் குதித்தது. அப்போதே பாஜக சித்துவேலைகளை ஆரம்பித்துவிட்ட தாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது ஜனநாயகத்தை கேலிக்கு உள்ளா க்கும் செயல் என்று விமர்சித்தன.
அதற்கேற்ப, மேயர் தேர்தலை நடத்துவதற்கு தற்காலிக தலைவராக முகேஷ் கோயல் என்பவரை நியமிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி இருந்த நிலையில், தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவோ, பாஜக திட்டப்படி சத்ய சர்மா என்பவரை தலைவராக நிய மித்தார். அத்துடன், தில்லி அரசுடன் ஆலோசிக்காமலேயே தில்லி மாநக ராட்சி தன்னிச்சையாக 10 நியமன உறுப்பினர்களை அறிவித்தார். பாஜக -வை பெரும்பான்மை பெறச் செய்வதற் காகவே இவ்வாறு ஆளுநர் செய்த தாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே பிரச்சனை துவங்கி விட்டது. “அவையின் மூத்த உறுப்பினரே தற்காலிக சபாநாயகராக, தலைமை யேற்கும் அதிகாரியாக நியமிக்கப்படு வது மரபு, ஆனால் பாஜக அனைத்து ஜனநாயக மாண்புகளையும் அழித்து வருகிறது” என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் விமர்சித்திருந்தார். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலும், நியமன உறுப்பினர்கள் தேர்வு க்கு கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், தில்லி மாநகராட்சி ஒரு தன்னாட்சி அமைப்பு. அதற்கும் தில்லி அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக பதிலளித்தது.
இந்நிலையில், அறிவித்தபடி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநகராட்சி மன்றக் கூட்டம் ஜனவரி 6-ஆம் தேதி காலை துவங்கியது. அப்போது, தற்காலிக தலைவர் சத்ய சர்மா, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் பதவியேற்க அழைப்பதற்குப் பதில், துணைநிலை ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களான ஆல்டர்மேன்களை பதவியேற்க அழைத்தார். இதற்கு ஆம் ஆத்மி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப் பினர்களை முதலில் பதவியேற்க அழைக்க வேண்டும் என்று கூறி மாநகராட்சி மன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாஜக உறுப்பினர்களுக் கும், ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு, ஒருகட்டத்தில் அது கைகலப்பாகவும் மாறியது. மாமன்றமே கூச்சலும் குழப்பமுமாக மாறியது.
இதைத்தான் பாஜக எதிர்பார்த்த தோ, என்னவோ பாஜக-வைச் சேர்ந்த தற்காலிக தலைவர் மேயர் பதவிக் கான வாக்குப்பதிவையும், மாமன்றக் கூட்டத்தையும் ஒத்திவைத்து, தில்லி மாநகராட்சி மேயர் பதவி ஆம் ஆத்மி வசம் செல்லாமல் பார்த்துக்கொண் டார். இது ஆம் ஆத்மி கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. மேயர், துணை மேயர் பதவிகளை நிச்சயமாக கைப்பற்றும். ஆனால், அது நடப்பதை பாஜக விரும்பவில்லை என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத் வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக அனைத்து சட்டங்களையும், அரசி யலமைப்பையும் மீறி பெரும்பான்மை பெற முயற்சிக்கிறது. மக்களின் தீர்ப்பை மீறி தில்லி மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்ற ‘பின்வாசல்’ வழியாக நுழைய முயற்சிக்கிறது என மற்றொரு ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி சாடியுள்ளார்.
இதனிடையே, ஆம் ஆத்மி உறுப்பினர்களின் தாக்குதலில் பாஜக கவுன்சிலர்கள் நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் ஒரு வருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். அனிதா மற்றும் இந்தர் கவுர் ஆகிய பாஜக-வின் 2 பெண் கவுன்சிலர்களை, ஆம் ஆத்மி யின் கவுன்சிலர்கள், கூர்மையான பொருளால் தாக்கியுள்ளனர்; இதில் அவர்களுக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டு ள்ளது என்று மற்றொரு பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார். முன்னதாக 9 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, மேயர் தேர்தலைப் புறக்கணித்து, கூட்டத்தில் கலந்து கொள்வதையே தவிர்த்து விட்டது குறிப்பிடத்தக்கது.