states

img

15 ஆண்டுகளாக வைத்திருந்த மேயர் பதவியை இழந்தது தில்லியில் பாஜக தோல்வி!

புதுதில்லி, பிப். 22 - துணை நிலை ஆளுநர் மூலம் ஒன்றிய பாஜக ஏற்படுத்திய பல்வேறு  தடைகள், அரங்கேற்றிய வன்முறை களைத் தாண்டி, தில்லி மாநகராட்சி யின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சி யைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மேயர் தேர்தல் புதனன்று நடை பெற்ற நிலையில், ஆம் ஆத்மி வேட்பா ளர் ஷெல்லி ஓபராய் 150 கவுன்சிலர் களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோற்றுப் போனார். இதன்மூலம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லி மேயர் பதவியை வகித்து வந்த பாஜக, தற்போது அப்பதவியை ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்துள்ளது. தில்லி மாநகராட்சிக்கு கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி தேர்தல் நடை பெற்றது. 7-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. பாஜக-வுக்கு  104 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால், மேயர் பதவி ஆம் ஆத்மி வசம் செல்வது உறுதியானது. ஆனால், துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மூலம் மேயர் பதவியைப் பிடிக்க பாஜக சதித்திட்டங்களில் இறங்கியது. கடந்த 2023 ஜனவரி 6-ஆம் தேதி மேயர் தேர்தல் நடந்தபோது, அவை நடத்துவதற்கான தற்காலிக அவைத் தலைவராக சத்ய சர்மா என்பவரை ஆளுநர் நியமித்தார். அத்துடன், தில்லி அரசுடன் ஆலோசிக்காமலேயே தன்னிச் சையாக 10 நியமன கவுன்சிலர்களை யும் அறிவித்தார். அவைத் தலைவர்  சத்ய சர்மா தன்பங்கிற்கு, தேர்ந்தெடுக் கப்பட்ட கவுன்சிலர்களை முதலில் அழைக்காமல், ஆளுநரால் நியமிக்கப் பட்ட ஆல்டர்மேன்களை பதவியேற்க  அழைத்தார். பாஜக-வை பெரும்பா ன்மை பெறச் செய்வதற்காகவே ஆளு நரும், அவைத் தலைவரும் இவ்வாறு செய்தனர்.  

இதற்கு ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, மாநகராட்சி மன்றத்திற்குள் மோதல் வெடித்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மொத்தம் 3 முறை மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தில்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 18-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. மேயர் தேர்தலுக்கு பிறகு, புதிய மேய ரின் தலைமையிலான கூட்டத்தில் துணை மேயர் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது.  இந்தப் பின்னணியில், புதனன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி  ஓபராய், மொத்தமுள்ள 250 வாக்கு களில் 150 வாக்குகளைப் பெற்று மேய ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக  வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்கு கள் பெற்று தோல்வி அடைந்தார். தில்லி மேயராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள 39 வயது பெண்ணான ஷெல்லி ஓபராய், இங்குள்ள 86-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவ ராவார். இந்திய வர்த்தக கூட்டமைப்பின் (ஐசிஏ) வாழ்நாள் உறுப்பினர். கல்லூரி யில் இளங்கலை படித்தபோது கல்வி யில் சிறந்து விளங்கியதற்காக மிஸ் கம்லா ராணி பரிசைப் பெற்றவர்.