நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆளுநருக்கு அறிவுரை சொல்பவர்கள் தகுந்த அறிவுரைகளை சொல்வதில்லை.
புதுதில்லி, மார்ச் 21 - “பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விஷ யத்தில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. “வெள்ளிக்கிழமைக்குள் (மார்ச் 22) ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்; இல்லை யென்றால், நாங்கள் அதை இப் போது சொல்லப் போவதில்லை” என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு எச்சரித்துள்ளது.
பிரிவு 164(1)ஐ மீறும் ஆளுநர் ரவி
சிறைத்தண்டனை விதிக்கும் தீர்ப்பை நிறுத்திவைத்து, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆளுநர் ரவி மறுப்பு தெரிவிப்பதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சிக்கிறார். அரசியல் சாச னத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ரவி அப்பட்டமாக மீறுகிறார். முதல்வர் பரிந்துரைந்த பின்பும் பொன் முடிக்கு அமைச்சராக பதவிப்பிர மாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தவறானது. சட்டத்துக்கு புறம்பானது” என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இதனை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு, வியாழனன்று விசாரணை நடத்தியது. அப்போது, ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, “ஒரு வருக்கு அமைச்சராக பதவிப்பிர மாணம் செய்து வைக்காத கார ணத்தினாலேயே அவருக்கான அடிப் படை உரிமை மறுக்கப்பட்டதாக கருதக் கூடாது” என்று வாதிட்டார். ஆனால், இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. “ஆளு நர்கள் அரசியல் சாசனப்படி செயல் படுவதை உறுதிப்படுத்தப்பட வேண்டிய தேவை உச்ச நீதி மன்றத்திற்கு இருக்கிறது” என்று உறுதிபடத் தெரிவித்தனர்.
பதவிப்பிரமாணத்திற்கு மறுப்பது ஆளுநர் வேலையல்ல
மேலும், “ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள் ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவ ருடைய வேலை அல்ல” என்று காட்ட மாக கூறிய நீதிபதிகள், “உயர் நீதி மன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன் முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதி மன்ற உத்தரவை மீறி பதவிப் பிர மாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூறமுடியும். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட் டார்.
கண்ணை மூடிக்கொண்டு இருக்க மாட்டோம்
மேலும், “நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாச னத்துக்கு எதிரானது. அரசியல் சாச னத்துக்கு எதிரான நடவடிக்கை களில் ஆளுநர் ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆளுநருக்கு அறிவுரை சொல்பவர்கள் தகுந்த அறிவுரைகளை சொல்வதில்லை. அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்யும். அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்படு கிறாரா என்பதை நாங்கள் பொறுத் திருந்து பார்த்துக் கொண்டிருக் கிறோம். யார், ஆளுநருக்கு அறிவுரை வழங்கினார்களோ, அவர்கள் முறையாக அறிவுரைகளை வழங்க வில்லை. அதாவது, உச்ச நீதி மன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கும்போது, தண்டனையை நிறுத்தி வைத்தது என ஆளு நருக்கு தெரிவிக்க வேண்டும். பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை (மார்ச் 22) வரை அவகாசம். இது தொடர்பாக 24 மணி நேரத்தில் ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் அர சியலமைப்புச் சட்டத்தின்படி நாங்கள் ஆளுநருக்கு உத்தர விடுவோம். நாங்கள் அதை இப்போது சொல்லப்போவ தில்லை” என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநர் ரவியே பதவி விலகு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 21 - பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்ய மறுத்து, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும் ஆர்.என். ரவி, ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிடுள்ள அறிக்கை வருமாறு: திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க. பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவரை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை என்றபோதும், ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சரின் கோரிக்கையை நிராகரித்ததோடு பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு மறுப்பும் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே கண்டித்திருந்தது.
இந்நிலையில், ஆளுநரின் சட்டத்திற்கு புறம்பான இச்செயலுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ‘பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, பதவிப் பிரமாணம் செய்ய மறுப்பதற்கு ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியதுடன், ‘இவரை நியமிக்க வேண்டுமென்று முதலமைச்சர் கூறினால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் அதை செய்யத்தான் வேண்டும்’ என்றும், ‘நாளைக்குள் (மார்ச் 22)க. பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்’ என்றும், ‘இல்லையேல் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்குக் கடுமையான உத்தரவினைப் பிறப்பிக்க நேரிடும்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ஆளுநர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே’ என்றும், ‘தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக உள்ளன’ எனவும் கருத்து தெரிவித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக க. பொன்முடி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென ஆளுநரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலும் செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக பதவி விலக வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.