சிட்னி, ஜூலை 4 - ஆஸ்திரேலியாவில் இடைவிடாது கனமழை பெய்து வருகிற நிலையில், 21 பணியாளர்களுடன் சென்ற சரக்கு கப்பலில் எஞ்ஜின் பழுதாகி, சிட்னி கடற்கரை பகுதியில் சிக்கிக் கொண்டது. சூறைக்காற்றால் கப்பல் அடித்துச் செல்லப்படும் அபாய நிலையும் நிலவுகிறது. பலத்த சூறைக் காற்றுக்கிடையே சரக்கு கப்பலை கரைப்பகுதிக்கு மீட்டுச் செல்லும் பணியில் இரு இழுவை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.