புதுதில்லி, ஜூலை 14 - இந்தியக் கடற்படைக்காக பிரான்சிடம் இருந்து 26 ரபேல்-எம் ரக போர் விமானங் களை வாங்க ஒன்றிய அரசின் பாதுகாப்பு மற்றும் கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council - DAC) ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிலை யில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தலைமையிலான, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அவசர அவசரமாக இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்தியா ஏற்கெனவே 36 ரபேல் போர் விமானங்களை வாங்கி வைத்திருக்கும் நிலையில், இந்த புதிய ரபேல்-எம் ரக விமானங்கள், கடற்படைக்கு என்று பிரத்யேகமாக வாங்கப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கூடுத லாக 3 ஸ்காா்பியன் நீா்மூழ்கிக் கப்பல்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 5.5 பில்லியன் யூரோக்கள் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரம் கோடியாகும். இந்நிலையில்தான், 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கப்பட்ட 36 ரபேல் விமானங்கள் தொடர் பான ஊழலுக்கே விடை தெரியாதபோது, மோடி அரசு புதிதாக 26 ரபேல் விமானங் களை வாங்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸ்ஸால்ட் (Dassault Aviation) நிறுவனத்திடம் 126 ரபேல் போர் விமானங்களை ரூ. 79 ஆயி ரத்து 200 கோடிக்கு வாங்குவது என்றும், இவற்றில் 18 விமானங்களை பறப்பதற்குத் தயாரான நிலையில் பெற்றுக் கொண்டு, மீத முள்ள 108 விமானங்களை இந்தியா விலேயே தயாரித்துக் கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. டஸ்ஸால்ட் நிறு வனம் ரபேல் விமானத் தொழில்நுட்பத்தை, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (Hindu stan Aeronautics Limited - HAL)நிறுவனத்திற்கு வழங்கும். அவற்றின் அடிப்படையில் 108 விமானங் களை எச்ஏஎல் நிறுவனமே தயாரிக்கும். 2014 மே மாதம் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாக அறிவித்து, 2016 செப்டம்பரில் அதே டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் புதிய ஒப்பந்த த்தை போட்டது. அதில், 36 ரபேல் விமானங் கள் 58 ஆயிரத்து 891 கோடி விலையில் வாங்கப்படுவதாக அறிவித்தது. இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஏனெனில், மன்மோகன் சிங் அரசு 126 விமானங்களை 79 ஆயிரம் கோடிக்கு வாங்குவதாக கூறியிருந்த நிலையில், வெறும் 36 விமானங்களுக்கே மோடி அரசு ரூ. 59 ஆயிரம் கோடியை தூக்கிக் கொடுப் பது ஏன்?; 2014-இல் 628 கோடி ரூபாயாக இருந்த ஒரு விமானத்தின் விலை, இரண்டே ஆண்டுகளுக்குள் 1,635 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி? என கேள்விகள் எழுப்பப்பட்டன.
பழைய ஒப்பந்தத்தில், டஸ்ஸால்டின் கூட்டு நிறுவனமாக, ‘டிஆர்டிஒ’ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையமும் (Defence Research and Development Organisation), ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவன மும் இணைக்கப்பட்டு இருந்தது. ஆனால், புதிய ஒப்பந்தத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறு வனத்தை வெளியேற்றி விட்டு, அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ ஸை உள்ளே கொண்டு வந்தார். ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறு வனத்தை உள்ளே கொண்டு வரு வதில்கூட பிரச்சனையில்லை; அந்த நிறு வனம் விமானத் தயாரிப்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத நிறுவனம். ஒரு விமா னத்தைக் கூட அந்த நிறுவனம் தயாரித்து வழங்கியது இல்லை. இன்னும் சொல்லப் போனால், ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ ஆரம்பிக்கப்பட்டே 15 நாட்கள்தான் ஆகி யிருந்தது. எனவே, விமானத் தயாரிப்பில் நீண்டகால அனுபவம் பெற்ற பொதுத் துறை நிறுவனத்தை வெளியேற்றிவிட்டு, ரிலையன்ஸ் டிபென்ஸை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? என்ற கேள்வி யும் அப்போது முன்னுக்கு வந்தது. இதற்கு பதிலளித்த மோடி அரசு, கூட்டு நிறுவனமாக ரிலையன்ஸ் டிபென்ஸ் இருக்க வேண்டும் என்று டஸ்ஸால்ட் நிறு வனம்தான் விரும்பியது என்று கூறியது. ஆனால், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அன்றைய பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே “ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டஸ்ஸா ல்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணை ந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப் பட்டது’’ என்று செய்தியாளர்கள் மத்தியில் உண்மையை போட்டு உடைத்தார்.
பழைய ஒப்பந்தத்தில், டஸ்ஸால்டின் கூட்டு நிறுவனமாக, ‘டிஆர்டிஒ’ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையமும் (Defence Research and Development Organisation), ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவன மும் இணைக்கப்பட்டு இருந்தது. ஆனால், புதிய ஒப்பந்தத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறு வனத்தை வெளியேற்றி விட்டு, அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ ஸை உள்ளே கொண்டு வந்தார். ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறு வனத்தை உள்ளே கொண்டு வரு வதில்கூட பிரச்சனையில்லை; அந்த நிறு வனம் விமானத் தயாரிப்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத நிறுவனம். ஒரு விமா னத்தைக் கூட அந்த நிறுவனம் தயாரித்து வழங்கியது இல்லை. இன்னும் சொல்லப் போனால், ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ ஆரம்பிக்கப்பட்டே 15 நாட்கள்தான் ஆகி யிருந்தது. எனவே, விமானத் தயாரிப்பில் நீண்டகால அனுபவம் பெற்ற பொதுத் துறை நிறுவனத்தை வெளியேற்றிவிட்டு, ரிலையன்ஸ் டிபென்ஸை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? என்ற கேள்வி யும் அப்போது முன்னுக்கு வந்தது. இதற்கு பதிலளித்த மோடி அரசு, கூட்டு நிறுவனமாக ரிலையன்ஸ் டிபென்ஸ் இருக்க வேண்டும் என்று டஸ்ஸால்ட் நிறு வனம்தான் விரும்பியது என்று கூறியது. ஆனால், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அன்றைய பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே “ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டஸ்ஸா ல்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணை ந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப் பட்டது’’ என்று செய்தியாளர்கள் மத்தியில் உண்மையை போட்டு உடைத்தார்.
இவ்வாறு அதிகாரத் துஷ்பிரயோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளால், பல ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் ஊழல் முறை கேட்டை அடியோடு மறைத்துவிட்ட நரேந்திர மோடி அரசு தற்போது புதிதாக 26 ரபேல் விமானங்களையும், 3 ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிகளையும் சுமார் ரூ. 50 ஆயி ரம் கோடிக்கு வாங்கும் ஒப்பந்தத்தில் தீவிரமாகியுள்ளது. ஆனால், இந்திய ஊடகங்களின் வாயை அடைத்து, ரபேல் ஊழலையே மறக்கடிக்க முடிந்த மோடி அரசால், பிரான்ஸ் ஊடகங்களிடமிருந்து தப்ப முடிய வில்லை. பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில், ரபேல் ஊழலை பிரான்ஸ் ஊடகங்கள் மீண்டும் நினைவுபடுத்தத் துவங்கின. இதையொட்டி, “பிரான்ஸ் புலனாய்வு செய்தி நிறுவனமான ‘மீடியாபார்ட்’, ஜூலை 11 அன்று ரபேல் ஒப்பந்தம் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், 2016-ஆம் ஆண்டின் ரபேல் ஒப்பந்த ‘ஊழல்’ குறித்து விசாரிக்கும் பாரிஸ் நீதித்துறை ஆணையம், ரபேல் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, டஸ்ஸால்ட் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் சுஷென் மோகன் குப்தாவுக்கு, ரூ. 8 கோடியே 62 லட்சம் ரூபாய் கமிஷன் வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டில், இந்திய அரசின் உதவியை நாடியுள்ளது. பாரிஸ் நீதித்துறை ஆணையத்தின் தலைவரே இதுதொடர்பாக நேரடியாக இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்; ஆனால், இந்திய அரசு ஊழலைக் கண்டுபிடிக்க உதவவில்லை என்று கூறியுள்ளது. அதேபோல, வரிக்குறைப்பு கோரி, ரிலையன்ஸ் டிபென்ஸ் தலைவரான அனில் அம்பானி, பிரான்ஸ் அரசுக்கு எழுதிய ரகசிய கடிதத்தையும், அதன்படி அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 151 மில்லியன் யூரோ வரிக்கட்டணம், வெறும் 6.6 மில்லியன் யூரோ-வாக குறைக்கப்பட்டு உள்ளது என்ற உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்துள்ளது.