மணிப்பூர், ஜூலை 25 - மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கும்பல் வல்லுறவுச் சம்ப வங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும் என்று குக்கி-ஜோமி, நாகா பழங்குடி மக்கள் மட்டுமன்றி, எதிர்க்கட்சி கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர் கள், பெண்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட பலரும் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில், 80 நாட்களுக்கும் மேலாக தொடரும் மணிப்பூர் வன்முறை தொடர்பான உண்மை நிலவரங்களை நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என்று எதிர்க் கட்சி எம்.பி.க்கள் கடந்த ஒருவாரமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாடா ளுமன்றத்தின் வழக்கமான அலுவல் களை ஒத்திவைத்து விட்டு, மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று விதி எண்: 267-இன் இந்தியா கூட்ட ணியின் 51 எம்.பி.க்கள், ஒத்திவைப்பு நோட்டீஸ்களை அளித்துள்ளனர். எனினும், பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிப்பதற்கு பிடிவாதமாக மறுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திற்கு வருவதையே தவிர்த்து, ஓடி ஒளியும் அவர், கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, அவர்களை முடக்கும் வேலையிலும் இறங்கியுள்ளார். இதனால், பிரதமர் நரேந்திர மோடி யை நாடாளுமன்றத்திற்கு வர வைப்ப தற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்கச் செய்வதற்குமான வியூகம் வகுக்கும் நடவடிக்கையில், ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிய பாஜக அரசு மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில், பிரதமர் நரேந்திர மோடி கட்டா யமாக நாடாளுமன்றத்திற்கு வந்துதான் ஆகவேண்டும்; குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்து பேசித்தான் ஆக வேண்டும் என்பதால், மோடி அரசு மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டுவருவது பற்றியும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி. க்கள் ஆலோசனையில் இறங்கியுள்ள னர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்றா லும், பிரதமர் மோடியை நாடாளுமன்றத் திற்கு வரவழைக்க வேண்டும்; அவரைப் பேசவைக்க வேண்டும் என்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றம் கூடுவதற்கு சற்று முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் காலை 10.40 மணியளவில் மல்லி கார்ஜூன கார்கே அறையில் நடைபெற் றது. இதில், மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்கும் வரை போராட்ட த்தைத் தொடர்வதென முடிவு செய்யப் பட்டது. அப்போதுதான், நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வருவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
4-ஆவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்
காலை 11 மணிக்கு நாடாளுமன்றத் தின் இரு அவைகளும் கூடிய நிலை யில், அடுத்த 3 நிமிடங்களிலேயே மக்கள வை, பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது. இதேபோல மாநிலங்களவை யில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பியூஸ் கோயல், உள் துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் விளக்கம் அளிப்பார். அதேபோல, ராஜஸ் தான், மேற்கு வங்கம், சத்தீஸ்கரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். எனினும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவை யும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.
இதனிடையே, சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில், திங்களன்று துவங்கிய போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது. செவ்வாயன்றும் போராட் டம் நடைபெற்றது. இதில், சஞ்சய் சிங் மட்டுமன்றி, இந்தியா கூட்டணி எம்.பி.க் களும் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய சஞ்சய் சிங் எம்.பி., “என்னை ஏன் மாநிலங்களவைத் தலைவர் இடை நீக்கம் செய்தார் என்று நான் கேட்க மாட்டேன். அந்தக் கேள்வியை அவரிடம் கேட்க அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல; ஆனால், மணிப்பூர் விவகாரத் தில் ‘பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்’ என்பதை தொடர்ந்து கேட்பேன். பிரத மர் நாடாளுமன்றம் வந்து இவ்விவகாரம் பற்றி பேச வேண்டும் என்பது மட்டுமே எங்களின் கோரிக்கை” என்று கூறினார். “எதிர்க்கட்சிகளாகிய நாங்கள், ஒன்று பிரதமர் மோடி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; மற்றொன்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கொடுத்த தீர்மான நோட்டீஸை ஏற்று அவை நட வடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் ஆகிய இரு கோரிக்கை களைத்தான் முன்வைக்கிறோம்; இது ஒன்றும் மணிப்பூர் மாநில பிரச்சனை மட்டுமல்ல.. தேசம் முழுவதற்குமான பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரியும் பேட்டி ஒன்றில் கூறினார்.