வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, டிச.10- வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வரும் 13-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகுகிறது. டிசம்பர் 13,14-ஆம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
பில்கிஸ் பானுவின் மேல்முறையீடு மீது டிச.13 இல் விசாரணை!
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதவன்முறையின் போது, இளம் பெண் பில்கிஸ் பானு கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த குற்றம் தொடர்பாக 11 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், குஜராத் பாஜக அரசு, அண்மையில் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்தது. இதை எதிர்த்தும், முன்கூட்டிய விடுதலைக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும் பில்கிஸ் பானு மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு டிசம்பர் 13 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் எம்எல்ஏ-க்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம்!
குஜராத்தில் வெற்றிபெற்ற 182 எம்எல்ஏ-க்களில் ஒரே ஒருவர் மட்டுமே இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஜமால்பூர்-ஹெடியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய இம்ரான் ஹிடவாலா 13 ஆயிரத்து 658 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் கடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தற்போதைய தேர்தலிலும், இம்ரானுக்கு மீண்டும் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கிய நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பூஷன் புட்டோவை அவர் தோற்கடித்துள்ளார். பாஜக சார்பில் வெற்றிபெற்ற 156 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினரை அமித்ஷா மிரட்டியது தவறில்லையாம்
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, “2002-இல் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்த பிறகு, அவர்கள் 2002 முதல் 2022 வரை வன்முறை யில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குஜராத்தில் பாஜக நிரந்தர அமைதியை நிலைநாட்டியுள்ளது” என்று கூறி யிருந்தார். இது முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை என்றும், தேர்தல் விதிமுறை மீறல் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், “அமிஷ் ஷாவின் பேச்சு தொடர்பாக குஜராத் தேர்தல் அலுவலரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டது. மேலும், அவரது பேச்சு அடங்கிய வீடியோ வும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், கலவரத்தில் ஈடுபட்ட “சமூக விரோதிகளுக்கு” பாடம் புகட்டப்பட்ட தாகவே கூறுகிறார். எந்த மதத்தையும் அவர் குறிப்பிடவில்லை என தேர்தல் ஆணையம் வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
இமாச்சலில் 3 சுயேச்சைகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு!
இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அங்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்எல்ஏ-க்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர். இதனால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் பலம் 43 ஆக அதிகரித்துள்ளது. இந்த 3 எம்எல்ஏ-க்களும் பாஜக தலைவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு தற்போது வெற்றியும் பெற்றுள்ளனர்.
கடுகு எண்ணெய் விளம்பர பேனரில் குடியரசுத் தலைவரின் படம்
ஒடிசாவில் தனியார் நிறுவனம் ஒன்று, தனது கடுகு எண்ணெய் தயாரிப்பு விளம்பர பேனரில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வின் புகைப்படத்தை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் கராஞ்சியா பகுதியில் இயங்கும் ராணி எனும் தனியார் கடுகு எண்ணெய் நிறுவனத்தினர்தான், தங்களின் விளம்பர பேனர்களில் குடியரசு தலைவர் முர்முவின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர். அதனைப் பொது வெளியிலும் வைத்துள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் குடியரசுத் தலைவரை அவமதித்து விட்டதாக நிறுவனத்தின் விநியோகஸ்தர் மற்றும் நிறு வன உரிமையாளர் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
‘தெலுங்கானா ராஷ்டிர சமிதி’, ‘பாரதிய ராஷ்டிர சமிதி’ ஆனது
தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், தனது தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை, கடந்த அக்டோபர் மாதம் ‘பாரதிய ராஷ்டிர சமிதி’ (பிஆர்எஸ்) என பெயர் மாற்ற செய்தார். இதற்கு அங்கீகாரம் கேட்டு தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டிருந்தார். இந்நிலையில் இந்த பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த தேர்தல் ஆணையம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை, பாரதிய ராஷ்டிர சமிதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையொட்டி கே. சந்திரசேகர் ராவ் தனது கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமார சாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாண்டஸ் புயல்: அதிகப்பட்சமாக 25 செ.மீ மழை பதிவு
சென்னை,டிச.10- வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் சனிக்கிழமையன்று (டிச.10) அதிகாலை 3 மணிக்கு முற்றிலுமாக கரையைக் கடந்தது. அப்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவா கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத் தில் மின்னல் மற்றும் பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ, காஞ்சிபுரம் 19 செ.மீ, செய்யாறு 18 செ.மீ. ஆவடியில் 17 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் சராசரியாக 10 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.
வண்டலூரில் விலங்குகளுக்கு பாதிப்பு இல்லை
சென்னை,டிச.10- மாண்டஸ் புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட பாதிப்பு களை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“மாண்டஸ் புயலால் மரங்கள் விழுந்து மதில் சுவர் பாதிக் கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக ஆய்வு செய்தேன்” என்றார். பூங்காவில் 7 பெரிய மரங்களும், சிறிய மரங்கள் பலவும் முறிந்து விழுந் துள்ளன. அலுவலக சுற்றுச்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சேதங்கள் உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றும் முறிந்து விழுந்துள்ள மரங்களை அப்புறப் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். புயல் காரணமாக பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. அவற்றின் கூண்டுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
12 மாவட்டங்களில் இன்றும் கனமழை
சென்னை,டிச.10- மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் (டிச.10) தமிழ்நாட்டின் 12 மாவட்டங்க ளில் கனமழை தொடர வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல், மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து, சனிக்கிழமையன்று (டிச.10) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுக் குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரண மாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை (டிச.11) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12 மற்றும் 13, 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
12 மற்றும் 13 ஆம் தேதி லட்சத் தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தி லும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த மின்சார பயன்பாடு
சென்னை,டிச.10- தமிழகத்தின் தினசரி மின்சார தேவை 14 ஆயிரம் மெகா வாட் ஆக உள்ளது. கோடை காலத்தில் இந்த அளவு 17 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு அதிகரிக்கும். இந்நிலையில், தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக வெள்ளியன்று (டிச.9) பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் குளிர்ந்த வானிலை நிலவியது. குளிர்ந்த வானிலை காரண மாக தமிழகத்தின் மின்சார தேவை மிகவும் குறைந்தது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பல இடங்களில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், 6300 மெகா வாட் மட்டுமே பயன் படுத்தப்பட் டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6490 மெகா வாட் மின்சாரம் பயன்படுத் தப்பட்டு இருந்தது. இதைப்போன்று சென்னை யிலும் மிகவும் குறைவான மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி சென்னை யில் வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு 9 மணிக்கு 2200 மெகா வாட்டாக இருந்த மின்சார பயன் பாடு நள்ளிரவுக்குப் பின் 1 மணிக்கு 753 மெகா வாட்டாக குறைந்தது.
அனைத்துத் தொகுதிகளிலும் கார்பன் நியூட்ரல் விளைநிலங்கள்: கேரள முதல்வர்
கொச்சி, டிச.10- கேரளத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன் நியூட்ரல் விளை நிலங்கள் உருவாக்கப்படும் என முதல் வர் பினராயி விஜயன் கூறினார். உணவு தன்னிறைவு அடைய நாட்டை உயர்த்த வேண்டும். இதனுடன் சுற் றுச்சூழல் சமநிலையையும் பேண வேண்டும். இங்குதான் கார்பன் நியூட் ரல் என்ற கருத்து செயல்படுகிறது. 140 தொகுதிகளிலும் கார்பன் நியூட்ரல் விவசாய நிலங்கள் உருவாக்கப்படும். இதன் ஒரு பகுதியாக பசுமை ஊட் டச்சத்து கிராமங்கள் உருவாக்கப்படும். கார்பன் நியூட்ரல் அதிரப்பள்ளிக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் பட்ஜெட் என்ற பெயரில் ஆவணம் அறி முகப்படுத்தப்படும் என்றும் முதலமைச் சர் கூறினார்.