புதுதில்லி, ஜூன் 2 - புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டுவது துவங்கி, குடியரசுத் தலைவரை அழைக்காமல், சாமியார்களை அழைத்து வந்தது; தானே நாடாளுமன்றத்தைத் திறந்து வைத்தது; மன்னராட்சி கால செங்கோலை, மக்களாட்சி நடக்கும் நாட்டில் பூஜித்து வழிபட்டது என திறப்பு விழா வரை, அனைத்தையும் சர்ச்சையாக்கியதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை என்றாகி இருக்கிறது. அந்த வகையில், நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவரோ வியங்கள், சிலைகளும் தற்போது சர்ச்சை யாகி உள்ளன. இதில் முக்கியமானது ‘அகண்ட பாரதம்’ ஓவியமாகும். மேற்கே ஈரான் முதல் கிழக்கே பர்மா இடையிலுள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூடான், திபெத், இலங்கை மற்றும் பர்மா ஆகிய அனைத்தும் ‘ஒரே தேசம்’தான் என்ற கோட்பாட்டை ஆர்எஸ்எஸ் முன்வைக்கிறது. அத்துடன், இந்த நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய அகண்ட பாரதமே தங்களின் லட்சியம் என்றும் அது கூறுகிறது. கடந்த மே 28 அன்று வி.டி. சாவர்க்கர் பிறந்த நாளில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, தங்களின் அகண்ட பாரதக் கனவை வெளிப் படுத்தும், சுவரோவியத்தையும் நாடாளு மன்ற வளாகத்தில் திறந்து வைத்தார். எதிர்பார்த்ததைப் போலவே இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான நேபாளம், இந்த சுவரோவியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளது. இந்திய அரசியல் வரைபடத்தில், தங்கள் நாட்டுப் பகுதிகளான லும்பினி, கபிலவஸ்து ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு இருப்ப தற்கு, நேபாளத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாமல், இந்தியாவில் 4 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள நேரத்தில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்தது முதலே நேபாளத்துடனான உறவை இந்தியா கெடுத்துக் கொண்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய இந்திய வரைபடத்தை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் உத்தர்கண்டின் காலாபாணி பகுதி, இந்தியாவிற்கு உரியதாக காட்டப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் 372 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காலாபாணி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி, நேபாளத்தின் மேற்கு பகுதி மற்றும் திபெத்திற்கு அருகில் உள்ளது. இந்தியா வெளியிட்ட புதிய மேப்பில், காலாபாணி இந்தியாவின் பகுதியாக வரையறுக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக அப்போதே நேபாள தலைநகர் காத்மாண்டுவில், நேபாள அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்தியாவின் புதிய வரைபடம் ஒருதலைப்பட்சமானது. சர்வதேச எல்லைக்கோடு விதிகளை இந்தியா மீறிவிட்டது என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த நேபாளம், 2020-இல் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகுதி களாக அடையாளப்படுத்தப்பட்டு வரும் லிபுலேக், காலாபாணி மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதி களாக அறிவித்து, அதுதொடர்பான வரை படத்தை வெளியிட்டது. பின்னர் இந்தப் பிரச்சனைகள் சற்று ஓய்ந்து இருந்தது. ஆனால், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அகண்ட பாரத சுவரோவியம் மூலம் ஒன்றிய பாஜக அரசு, அண்டை நாடான நேபாளத்தை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளது.