states

img

ஒரு லெப்டினன்ட் ஜெனரலின் குமுறல்

லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் ஷா என்பவர் “சர்க்காரி முசல்மான்” எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.அதில்,2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏவப்பட்ட வன்முறைகளின் போது, அன்றைய முதல்வராக இருந்த மோடி  தளவாடங்களையும், போக்குவரத்து வசதிகளை யும் ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட தோல்வியே வன் முறைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முடக்கியதாக தெரிவிக்கிறார். 3000 ராணுவப் படையினர் விமான நிலையத்தில் இறங்கிய போது  அது சுடுகாடு போன்று இருண்டு கிடந்ததாகக் கூறு கிறார். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல  வாகன வசதி எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் அதிகபட்ச அழிவும், பெரும் சேதாரமும் ஏற்பட்டதாகக் கூறுகிறார். அவர் 2002 மார்ச் 1 இல் மோடியை சந்தித்து வன்முறைகளை கட்டுப்படுத்தி சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான தேவைகள் அடங்கிய பட்டியலை மோடியிடம் அளித்தார். உரியவாறு போக்குவரத்து வசதிகளும் தளவாடங்களும் வழங்கி இருந்தால் ஏராளமான மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும்,சேதாரங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்கிறார்.